திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1993 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1993பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில் இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் – கர்ம வஸ்யர் உடைய ரஷணத்துக்கு வந்து பிறக்குமவன் ஆகையாலும் அவன் தான் சர்வ காரண பூதன் ஆகையாலும்-நமக்கு ஓர் குறை உண்டோ -என்கிறது) 2
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ!
தந்தை, Thandai - தந்தையாகிய வஸுதேவருடைய
தளை, Thalai - கால்விலங்கு
கழல, Kazhala - கழன்று விழும்படியாக
தோன்றி, Thonri - அவதரித்து
போய், Poi - மதுரையில் நின்றும் பெயர்ந்து போய்
ஆய்ப்பாடி, Aayppadi - திருவாய்ப்பாடியில்
நந்தன், Nandan - நந்தகோபருடைய
குலம், Kulam - குலத்திற்கு (க்கொழுந்தான)
மதலை ஆய், Madalai Aay - பிள்ளையாய்
வளர்ந்தான் காண், Valarnthaan Kaan - வளர்ந்தானன்றோ
சாழலே, Saalale - தோழீ!
நந்தன் குலம் மதலை ஆய் வளர்ந்தான், Nandan Kulam Madalai Aay Valarnthaan - இடைப்பிள்ளையாய் வளர்ந்தவன்
நான் முகற்கு, Naan Mugarku - நான் முகனுக்கு
தந்தை காண், Thandai Kaan - தகப்பன் காண்
எந்தை பெருமான் காண், Endhai Perumaan Kaan - என்னுடைய குலநாதன் காண்