திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1995 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே அது பின்னாட்டுகிறபடி – மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே சேமித்து வைத்த அன்று கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் – சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது – இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண்) 4 | அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே –11-5-4 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! அறியா தார்க்கு, Ariyaa Thaarakku - ஒன்றுமறியாதவர்களுக்குள்ளே ஆன் ஆயன் ஆகி, Aan Aayan Aagi - மாடுமேய்க்குமிடைக்குலத்தவனாய் ஆய்ப்பாடி, Aayppadi - இடைச்சேரியிலே உறி ஆர், Uri Aar - உறிகளிலே பொருந்தின நறு வெண்ணெய், Naru Vennyei - மணம்மிக்க வெண்ணெயை உண்டு, Undu - (களவுசெய்து) உட்கொண்டு உகந்தான் காண், Uganthaan Kaan - ஸந்தோஷதித்தான் காண் சாழலே, Saalale - தோழீ! உறி ஆர் நறுவெண்ணெய் உண்டு உகந்த, Uri Aar Naruvennyei Undu Ugantha - உறிகளிலே பொருந்திய நறுவெண்ணெயை உட்கொண்டு உவந்த பொன் வயிற்றுக்கு, Pon Vayirukku - திருவயிற்றுக்கு எறி நீர் உலகு அனைத்தும், Eri Neer Ulagu Anaiththum - கடல்சூழ்ந்த லோகங்களெல்லாம் எய்தாது, Eydhaadhu - போதாது ஆல், Aal - ஆச்சரியம் |