திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1997 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1997பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கேட்டார் நெஞ்சு ஈரும் படி த்வனிக்க இடையர் மனஸ் களிப்ப மன்றிலே மரத்தைக் காலிலே கட்டி ஆடினான் காண் – இப்படி இடையர் கண் வட்டத்திலே நிற்கிற வஸ்துவை ப்ரஹ்மாதிகள் கண் வட்டத்திலே கண்டு அறிவார் இல்லை) 6
கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும் என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே –11-5-6
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (மன்றில் மரக்கால்கூத்து ஆடினான் ஆகிலும்))
கன்ற, Kanru - (விரோதிகளின் நெஞ்சு) கன்றும்படியாக
பறை கறங்க, Parai Karangka - பறைகள் ஒலிக்கவும்
கண்டவர் தம், Kandavar Tham - பார்த்தவர்களினுடைய
கண், Kan - கண்களானவை
களிப்ப, Kalippa - கனிக்கவும்
மன்றில், Manril - நாற்சந்திகளிலே
மரக்கால் கூத்து ஆடினான் காண், Marakkaal Koothu Aadinan Kaan - மரத்தைக் காலிலேகட்டி யாடுவதொரு கூத்தை ஆடினானன்றோ?
சாழலே, Saalale - தோழீ!
இமை யோர்க்கும், Imai Yorkkum - தேவர்களுக்கும்
என்றும், Endrum - என்றைக்கும்
அரியன், Ariyan - அருமைப்பட்டவன் காண்.