Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 200 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
200பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 9
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள்
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9
இருக்கொடு, Irukodu - (புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு
நீர், Neer - தீர்த்தத்தை
சங்கில், Sangil - சங்கத்திலே
கொண்டிட்டு, Kondittu - கொணர்ந்து
எழில், Ezhil - விலக்ஷணரான
மறையோர், Maraaiyor - ப்ராஹ்மணர் (உனக்கு ரக்ஷையிடுவதற்கு)
வந்து நின்றார், Vandhu nindraar - வந்து நிற்கிறார்கள்;
நம்பி, Nambi - தீம்பு நிறைந்தவனே!
சந்தி நின்று, Sandhi nindru - நாற்சந்தியிலே நின்று
தருக்கேல், Tharukkael - செருக்கித் திரியாதே
சில நாள், Sil naal - சில காலம்
தாய் சொல்லு, Thai sollu - தாய் வார்த்தையை
கொள்ளாய், Kollaay - கேட்பாயாக;
தேசு உடை வெள்ளறை நின்றாய், Desu udai vellarai nindraay - தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்!
இன்று, Indru - இப்போது
நான், Naan - நான்
திரு காப்பு, Thiru kaappu - அழகிய ரக்ஷையை
உன்னை சாத்த, Unnai saathu - உனக்கு இடுதற்காக
உருகாட்டும் அந்திவிளக்கு, Urukaatum andhivilakku - உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை
ஏற்றுகேன் வாராய், Etruken vaaraay - ஏற்றுவேன் (இதைக்காண) கடுக வருவாயாக