திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2001 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது – சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி ஸ்ரீ திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண் அப்படி இருக்கிறவன் காண் ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும் புறப்படாதே கிடக்கிறான்) 10 | கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (ஒருவர்க்கும் எளியவனாகாதபடி)) கள்ளத்தால், Kallathaal - கபடவேடித்தினால் மாவலியை, Mavalaiya - மாவலியிடத்தில் மூ அடி மண் கோண்டு, Moo Adi Man Koondhu - மூன்றடிமண்ணை இரந்து பெற்று அளந்தான், Alandhaan - அளந்துகொண்டவன் வெள்ளத்தான், Vellaththaan - திருப்பாற்கடலிலே உள்ளான் வேங்கடத்தான், Vengadaththaan - திருமலையிலே உள்ளான் என்பர்காண், Enpar Kaan - என்று சொல்லுகிறார்களன்றோ? சாழலே, Saalale - தோழீ! வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும், Vellaththaan Vengadaththaan Aelum - திருப்பாற்கடலிலும் திருமலையிலும் அருமைப்படவுள்ளவனே யாகிலும் கலிகன்றி, Kalikanri - கலியனுடைய உள்ளத்தின் உள்ளே, Ullaththin Ullae - ஹ்ருதயத்தினுள்ளே |