திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2002 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தமோ குணா அபிபூதராய் இருக்கையாலே ஸ்ரீ பரமாத்மாவுக்கு சரீரம் என்று உபாசிக்கப் போகாதவர்களை –செய்ந்நன்றி குன்றேல்மின் – அப்ராப்த விஷயங்களில் தாழ்வு செய்ய ஆசைப் பட்ட நீங்கள் –ஸ்ரீ சர்வேஸ்வரனையே ஏத்தப் பாருங்கோள்) 1 | மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1 | பதவுரை Show / Hideதொண்டர்காள், Thondarkal - (தகுதியற்றவிடத்திலே) தொண்டுபட்டிருப்பவர்களே! மை நின்ற கரு கடல் வாய், Mai Nindra Karu Kadal Vaai - மைமாறாதே நின்றாப்போலே கறுத்திருந்துள்ள கடலிடத்து உலகு இன்றி, Ulaku Inri - லோகமொன்று மில்லாமல் வானவரும், Vaanavarum - தேவர்களும் யாமும், Yaamum - (மனிதர்களான) நாமும் எல்லாம், Ellam - (ஆகிய) எல்லாப்பொருள்களும் நெய்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில், Neyninra Chakkarathan Thiruvayittril - நெய்யிட்டு விளங்காநின்ற திருவாழியையுடையனான எம்பெருமானுடைய திருவயிற்றில் நெடுங்காலம், Nedungaalam - வெகுகாலம் கிடந்தது, Kidandhadhu - அடங்கியிருந்தமை ஓரீர், Oorir - அறிகின்றீரில்லையே எந்நன்றி செய்தார் ஆ, Ennankuri Seithaar Aa - என்னவுபகாரம் பண்ணினார்களாகக் கொண்டு எதிலோர் தெய்வத்தை, Edhiloor Deivaththai - விரோதிகளின் தேவதாந்தரங்களை ஏத்துகின்றீர், Aethugindreer - துதிக்கின்றீர்கள்? செய் நன்றி குன்றேல் மின், Sei Nandri Kunrheel Min - (எம்பெருமான்) செய்தநன்றியை மறவாதீர்கள், அண்டனையே, Andanaiye - (அந்த) ஸர்வேச்வரனையே ஏத்தீர்கள், Aeththirgal - துதியுங்கோள் |