திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2004 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஐஸ்வர்ய சூசகமாய் எதிரிகளை முடிக்க வற்றான ஸ்ரீ திரு வாழியை உடையவன் உடைய குணங்களை அடைவு கெடச் சொல்லாத தண்ணிய ஷூத்ரங்களை-சஹிக்க அரிதாய் இருக்கிறவவர்கள் க்ரௌர்யம் இருந்த படி என்) 3 | நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –11-6-3 | பதவுரை Show / Hideநெற்றிமேல் கண்ணானும், Netrimeel Kannaanum - நெற்றிக் கண்ணனான சிவபிரானும் நிறை மொழிவாய் நான்முகனும், Nirai Mozhivai Naanmukanum - வேதங்களை உச்சரிப்பவனான பிரமனும் நீண்ட நூல் வாய் ஒற்றைக் கை வெண்பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட, Neenda Nool Vaai Otrai Kai Venpakattin Oruvanaiyum Ullitta - நீண்டு தொங்குகின்ற வாயையும் துதிக்கையுமுடைய (ஐராவதமென்கிற) வெள்ளையானைப்பாகனான இந்திரனும் முதலான அமரரோடும், Amararodum - தேவர்களெல்லாரையும் வெற்றி போர் கடல் அரையன் விழுங்காமல், Vettri Por Kadal Arayan Vizhungamal - ஐயசீலனான ஸமுத்ரராஜன் விழுங்க வொண்ணாதபடி தான் விழுங்கி, Thaan Vizhunki - தான் திருவயிற்றிலைவைத்து உய்யக்கொண்ட, Uyyaakkonda - உஜ்ஜிவிப்பித்தருளின கொற்றம் போர் ஆழியான், Kottam Por Azhiyan - யுத்தங்களில் வெற்றிபெறுகின்ற திருவாழியை யுடையனான எம்பெருமானுடைய குணம், Gunam - திருக்குணங்களை பாவா, Paavaa - துதிசெய்கில்லாத சிறு தொண்டர், Siru Thondar - க்ஷுத்ரஜனங்களுடைய கொடிய ஆறு ஏ, Kodiya Aaru Ae - கொடுத்தன்மை இருக்கிறபடி என்னே! |