திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2007 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க – அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர் – அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே) 6 | பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே –11-6-6 | பதவுரை Show / Hideபேய் இருக்கும், Pei Irukkum - (மனிசரொருவருமில்லாதபடி) பேய் பிசாசுகளேயிருக்க வேண்டும்படியான நெடு வெள்ளம், Nedu Vellam - மஹாப்ரளய வெள்ளமானது பெரு விசும்பின்மீது ஓடி, Peru Visumbinmidhu Odi - ஆகாசத்தின்மேல் வழிந்தோடி பெருகுகாலம், Perugukalam - பிரவஹித்த காலத்திலே தாய் இருக்கும் வண்ணமே, Thai Irukkum Vanname - பெற்றதாய்போல(ப்பரிந்து) உம்மை, Ummmai - உங்களை தன் வயிறு, Than Vayiru - தன் திருவயிற்றிலே இருத்தி, Iruththi - இருக்கவைத்து உய்யக்கொண்டான், Uyyaikkondan - உஜ்ஜீவிப்பித்தருளின பெருமான் போயிருக்க, Poyirukka - வெறுக்கும்படியாக இங்கு, Ingu - இங்கே மற்று ஓர் புதுதெய்வம், Mattru Or Puthudeivam - மற்றொரு க்ஷுத்ரதேவதையை கொண்டாடும், Kondaatum - கொண்டாடுகிற தொண்டீர், Thondeer - தொண்டர்களே! |