திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2008 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2008பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிருபை பண்ணி சந்நிஹிதனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ணமங்கைக்கு நிர்வாஹகன் ஆனவனுடைய திருவடிகளைப் பேணி –அவனை ஹிருதயத்தில் எண்ணாத மனுஷ்யரை – பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அவைஷ்ணவர்களை நினையாத போது – இனிது என்கை) 7
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே –11-6-7
பதவுரை Show / Hide
மண் நாடும், Man Naadum - பூலோகமும்
விண் நாடும், Vin Naadum - சுவர்க்கமும்
வானவரும், Vaanavarum - தேவர்களும்
தானவரும், Thaanavarum - அசுரர்களும்
மறறும் எல்லாம், Mararum Ellam - மற்றுமுண்டான பொருள்களுமெல்லாம்
உண்ணாத, Unnaadha - தகைய வொண்ணாத
பெரு வெள்ளம், Peru Vellam - மஹாப்ரவாஹம்
உண்ணால், Unnaal - (உலகத்தை) விழுங்காதபடி
தான் விழுங்கி உய்யக் கொண்ட, Thaan Vizhunki Uyyak Konda - தான் திருவயிற்றிலே  வைத்து நோக்கி
கண்ணாளன், Kannaanalan - பரமதயாளுவும்
கண்ணமங்கை நகராளன், Kannamangai Nagaralan - திருக்கண்ணமங்கைத் தலத்திற்குத் தலைவனுமான எம்பெருமானுடைய
கழல், Kazhal - திருவடிகளை
சூடி, Soodi - சிரமேற்புனைந்து
அவனை, Avanai - அப்பெருமான்
உள்ளது, Ulladhu - நெஞ்சிலே
எண்ணாத, Ennaadha - சிந்திக்கமாட்டாத
மானிடத்தை, Maanidaththai - மனிசர்களை
எண்ணாத போது எல்லாம், Ennaadha Podhu Ellam - நினைக்கப்பெறாதகால மெல்லாம்
இனிய ஆறே, Iniya Aare - எமக்கு இனிதாகச் செல்லும் விதம் என்னே!