திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2008 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிருபை பண்ணி சந்நிஹிதனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ணமங்கைக்கு நிர்வாஹகன் ஆனவனுடைய திருவடிகளைப் பேணி –அவனை ஹிருதயத்தில் எண்ணாத மனுஷ்யரை – பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அவைஷ்ணவர்களை நினையாத போது – இனிது என்கை) 7 | மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே –11-6-7 | பதவுரை Show / Hideமண் நாடும், Man Naadum - பூலோகமும் விண் நாடும், Vin Naadum - சுவர்க்கமும் வானவரும், Vaanavarum - தேவர்களும் தானவரும், Thaanavarum - அசுரர்களும் மறறும் எல்லாம், Mararum Ellam - மற்றுமுண்டான பொருள்களுமெல்லாம் உண்ணாத, Unnaadha - தகைய வொண்ணாத பெரு வெள்ளம், Peru Vellam - மஹாப்ரவாஹம் உண்ணால், Unnaal - (உலகத்தை) விழுங்காதபடி தான் விழுங்கி உய்யக் கொண்ட, Thaan Vizhunki Uyyak Konda - தான் திருவயிற்றிலே வைத்து நோக்கி கண்ணாளன், Kannaanalan - பரமதயாளுவும் கண்ணமங்கை நகராளன், Kannamangai Nagaralan - திருக்கண்ணமங்கைத் தலத்திற்குத் தலைவனுமான எம்பெருமானுடைய கழல், Kazhal - திருவடிகளை சூடி, Soodi - சிரமேற்புனைந்து அவனை, Avanai - அப்பெருமான் உள்ளது, Ulladhu - நெஞ்சிலே எண்ணாத, Ennaadha - சிந்திக்கமாட்டாத மானிடத்தை, Maanidaththai - மனிசர்களை எண்ணாத போது எல்லாம், Ennaadha Podhu Ellam - நினைக்கப்பெறாதகால மெல்லாம் இனிய ஆறே, Iniya Aare - எமக்கு இனிதாகச் செல்லும் விதம் என்னே! |