Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 201 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
201பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 10
போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2- 8-10
மாதர்க்கு உயர்ந்த, Maadharkku uyarntha - ஸ்திரீகளுள் சிறந்த
அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டி
மகன் தன்னை, Magan thannai - தன் புத்ரனான கண்ணனை
காப்பு இட்ட, Kaappu itta - ரக்ஷை யிட அழைத்த
மாற்றம், Maatram - வார்த்தையை
போது அமர், Pothu amar - தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய
செல்வக் கொழுந்து, Selva kozhundhu - செல்வத்திற்கு உரியவளாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி
புணர், Punar - ஸம்ச்லேஷிக்கப் பெற்ற
திரு வெள்ளறையானை, Thiru vellaraiyaanai - திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி
வேதப் பயன், Vedha payan - (எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே) வேத தாத்பர்யமாக
கொள்ள வல்ல, Kolla valla - அறிய வல்ல
விட்டு சித்தன், Vittu chithan - பெரியாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
மாலை, Maalai - பாமாலையினுடைய
பாதம் பயன், Paadham payan - ஓரடி கற்றதனாலாகிய பயனை; நாலாம் அடியில் சொன்ன காப்பிடுதலை
கொள்ள வல்ல, Kolla valla - அடைய வல்ல
பக்தர் உள்ளார், Bakthar ullaar - பக்தராக உள்ளவரது
வினை, Vinai - வினைகளெல்லாம்
போம், Poom - கழிந்து விடும்