| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 201 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 10 | போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம் வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2- 8-10 | மாதர்க்கு உயர்ந்த, Maadharkku uyarntha - ஸ்திரீகளுள் சிறந்த அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டி மகன் தன்னை, Magan thannai - தன் புத்ரனான கண்ணனை காப்பு இட்ட, Kaappu itta - ரக்ஷை யிட அழைத்த மாற்றம், Maatram - வார்த்தையை போது அமர், Pothu amar - தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய செல்வக் கொழுந்து, Selva kozhundhu - செல்வத்திற்கு உரியவளாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி புணர், Punar - ஸம்ச்லேஷிக்கப் பெற்ற திரு வெள்ளறையானை, Thiru vellaraiyaanai - திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி வேதப் பயன், Vedha payan - (எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே) வேத தாத்பர்யமாக கொள்ள வல்ல, Kolla valla - அறிய வல்ல விட்டு சித்தன், Vittu chithan - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த மாலை, Maalai - பாமாலையினுடைய பாதம் பயன், Paadham payan - ஓரடி கற்றதனாலாகிய பயனை; நாலாம் அடியில் சொன்ன காப்பிடுதலை கொள்ள வல்ல, Kolla valla - அடைய வல்ல பக்தர் உள்ளார், Bakthar ullaar - பக்தராக உள்ளவரது வினை, Vinai - வினைகளெல்லாம் போம், Poom - கழிந்து விடும் |