திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2011 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாட்டுக்கு இதையே பொருள் திரண்டு பரந்த சோலைகள் உடைய ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் அறிந்து உரைத்தார் – இதையே பொருள் -ஸ்ரீ த்வயத்தின் க்ரமத்திலே பல சுருதி அருளுகிறார் – சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் -என்றும் குடந்தையே தொழுமின் என்றும் –உபக்ரமித்து – தண் குடந்தை பாடி ஆடீர்களே என்று உபதேசித்துத் தலைக் கட்டுகிறார்) 10 | தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –11-6-10 | பதவுரை Show / Hideதேவரையும், Thevaraiyum - தேவர்களையும் அசுரரையும், Asuraraiyum - அசுரர்களையும் திசைகளையும், Thisaigalaiyum - திருக்குக்களையும் கடல்களையும், Kadalgalaiyum - ஸப்த ஸாகரங்களையும் முற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமே, Mutrum Mutrum Yaavaraiyum Ozhiyamae - மற்றுமுள்ள எல்லாவற்றையும் ஒன்று தப்பாமல் எம் பெருமான் உண்டு உமிழ்ந்த்து, Em Perumaan Undu Umizhndhu - எம்பெருமான் (பிரளய காலத்தில்) திருவயிற்றிலேவைத்து (ப்பின்பு) வெளிப்படுத்தியதை அறிந்து, Arindhu - உள்ளபடியறிந்து சொன்ன, Sonna - அருளிச்செய்த கா வளரும் பொழில் மங்கை, Kaa Valarum Pozhil Mangai - பூந்தோட்டங் வளரப்பெற்ற சோலைகளை யுடையவருமங்கை நாட்டுத் தலைவரான கலிகன்றி, Kalikanri - ஆழ்வாருடைய ஒலி மாலை, Oli Maalai - சொல்மாலையாகிற இத்திருமொழியை கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள் பூவளரும் திரு மகளால் அருள் பெற்று, Poovalarum Thiru Magalal Arul Petru - தாமரைப்பூவில் வளர்கின்ற பெரிய பிராட்டியாராலே அருள்செய்யப்பெற்று பொன் உலகில், Pon Ulavil - நித்ய விபூதியிலே பொலிவர், Polivar - விளங்கப்பெறுவர்கள் |