திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2012 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அமுதம் கொண்டுகந்த- பிறருக்கு உபகரித்தானாய் இராதே தன் பேறாக உகந்தான் – இப்படிச் செய்கிறது -உடையவன் ஆகையாலே – பூணார மார்வனைப்-இவர் தம்முடைய -அம்ருதம் –சர்வாபரண பூஷிதனாய் பெரிய திருவடி தோளில் இருந்த இருப்பு – ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே – இதுக்கு முன்பு கண்டவை என்றும் கண் அல்ல –ஷேபமாகக் கண்டோமே -என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே –11-7-1 | பதவுரை Show / Hideநீள் நாகம், Neel Naagam - நீண்ட வாஸுகி நாகத்தை சுற்றி, Suttri - (கடைகயிறாகச்) சுற்றி நெடு வரை, Nedu Varai - பெரிய (மந்தர) மலையை நட்டு, Nattu - (மத்தாக) நாட்டி ஆழ் கடலை, Aaz Kadhalai - ஆழ்ந்த கடலை பேணான், Penaan - மதியாதவனாகி கடைந்து, Kadaindhu - கடைந்து அமுதம், Amudham - அம்ருத்த்தை கொண்டு, Kondhu - தேவர்கட்கு எடுத்துத்தந்து உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்த பெம்மானை, Pemmanaai - பெருமானும், ஆரம் பூண் மார்வனை, Aaram Poon Maarvanai - ஹாரங்களையணிந்த திருமார்பையுடையனும் புள் ஊரும், Pul Oorum - பெரிய திருவடியை ஏறிச்செலுத்துகின்ற பொன்மலையை, Ponmalaiyai - பொன் மலைபோன்றவனுமான ஸர்வேச்வரனை காணாதார், Kaanadhaarkal - ஸேவிக்கப் பெறாதவர்களுடைய கண், Kan - கண்களானவை என்றும், Endrum - ஒருநாளும் கண் அல்ல, Kan Alla - கண்களே அல்ல கண்டாம், Kandam - (இதைநாம் நன்கு) அறிவோம் |