திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2013 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று ஆஸ்ரிதர் ஈடுபட்டு நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவனுடைய கீர்த்தி கேட்க வென்றால் கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல – கேட்டோமே –ஷேபம்) 2 | நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2 | பதவுரை Show / Hideநீள்வான், Neelvaan - நீண்டு வளர்வதற்காக குறள் உரு ஆய், Kural Uru Aay - வாமநலேஷதாரியாய் நின்று, Ninru - (யஜ்ஞசாலையிலேவந்து) நின்று மாவலி, Mavali - மஹாபலியினிடத்தில் மண், Man - (மூவடி) மண்ணை இரந்து, Irantu - யாசித்து தாளால், Thaalal - திருவடிகளாலே அளவு இடம், Alavu Idam - அளந்து கொண்டவனும் தக்கணைக்கு மிக்கானை, Thakkanaiyku Mikkaanai - அக்ரதாம்பலமளிப்பதற்குச் சிறந்தவனும் தோளத மா மணியை, Tholadha Maa Maniyai - துளைபட்டு ஒளிமழுங்காத நீலமணி போன்றவனும் தொண்டர்க்கு இனியானை, Thondarkku Iniyanai - பக்தர்களுக்குப் போக்யனுமான எம்பெருமானை கேளா, Kela - கேட்கப்பெறாத செவிகள், Sevigal - காதுகள் செவி அல்ல, Sevi Alla - காதுகளேயல்ல கேட்டோம், Kettom - (இதை நாம் பெரியோரிடத்துக்) கேட்டிருக்கின்றோம். |