திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2013 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2013பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று ஆஸ்ரிதர் ஈடுபட்டு நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவனுடைய கீர்த்தி கேட்க வென்றால் கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல – கேட்டோமே –ஷேபம்) 2
நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2
பதவுரை Show / Hide
நீள்வான், Neelvaan - நீண்டு வளர்வதற்காக
குறள் உரு ஆய், Kural Uru Aay - வாமநலேஷதாரியாய்
நின்று, Ninru - (யஜ்ஞசாலையிலேவந்து) நின்று
மாவலி, Mavali - மஹாபலியினிடத்தில்
மண், Man - (மூவடி) மண்ணை
இரந்து, Irantu - யாசித்து
தாளால், Thaalal - திருவடிகளாலே
அளவு இடம், Alavu Idam - அளந்து கொண்டவனும்
தக்கணைக்கு மிக்கானை, Thakkanaiyku Mikkaanai - அக்ரதாம்பலமளிப்பதற்குச் சிறந்தவனும்
தோளத மா மணியை, Tholadha Maa Maniyai - துளைபட்டு ஒளிமழுங்காத நீலமணி போன்றவனும்
தொண்டர்க்கு இனியானை, Thondarkku Iniyanai - பக்தர்களுக்குப் போக்யனுமான எம்பெருமானை
கேளா, Kela - கேட்கப்பெறாத
செவிகள், Sevigal - காதுகள்
செவி அல்ல, Sevi Alla - காதுகளேயல்ல
கேட்டோம், Kettom - (இதை நாம் பெரியோரிடத்துக்) கேட்டிருக்கின்றோம்.