திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2014 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2014பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டு பாட்டாலே ஞாநேந்த்ரியன்களை நிரசித்த்தார் இனி மூன்று பாட்டாலே கர்மேந்திரியங்களை நிரசிக்கிறார் – இதில் அவனுடைய கீர்த்திகளை ஒழிய பேசுமவை கடலோசை பேச்சாய் இருக்கச் செய்தேயும் – அர்த்தம் இன்றிக்கே இருக்கிறாப் போலே – கேட்டுத் திரிகிறிகோள் இறே -என்று ஷேபம்) 3
தூயானைத் தூய மறையானைத் தென்னாலி மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட வாயானை மாலை வணங்கி யவன் பெருமை பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3
பதவுரை Show / Hide
துயானை, Thuyanaik - பரமபவித்திரனும்
தூய மறையானை, Thuya Maraiyanai - பரிசுத்தமான வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
தென் ஆலி மேயானை, Then Aali Meyaanai - அழகிய திருவாலிப்பதியிலே பொருந்தி வாழ்பவனும்
மேவாள் உயிர் உண்டு அமுது உண்டவாயானை, Mevaal Uyir Undu Amuthu Undavayanai - பொருத்தமற்றவளான பூதனையினுடைய உயிரை உறிஞ்சியுண்டு (அந்த விஷத்திற்குமாற்றாகத் தாயின்) முலைப்பாலமுதை உண்ட வாயையுடையவனுமான
மாலை, Malai - திருமாலை
வணங்கி, Vanangi - அடிபணிந்து
அவன், Avan - அப்பெருமானுடைய
பெருமை, Perumai - பெருமேன்மையை
பேசாதார், Pesathar - பேசப்பெறாதவர்களுடைய
பேச்சு, Peetchu - பேச்சுக்களானவை
என்றும், Endrum - ஒருகாலும்
பேச்சு அல்ல, Peetchu Alla - பேச்சுக்களாகமாட்டா
கேட்டோம், Kettom - (இதனை நாம் பெரியோர்களிடத்துக்) கேட்டிருக்கின்றோம்.