திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2014 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டு பாட்டாலே ஞாநேந்த்ரியன்களை நிரசித்த்தார் இனி மூன்று பாட்டாலே கர்மேந்திரியங்களை நிரசிக்கிறார் – இதில் அவனுடைய கீர்த்திகளை ஒழிய பேசுமவை கடலோசை பேச்சாய் இருக்கச் செய்தேயும் – அர்த்தம் இன்றிக்கே இருக்கிறாப் போலே – கேட்டுத் திரிகிறிகோள் இறே -என்று ஷேபம்) 3 | தூயானைத் தூய மறையானைத் தென்னாலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை வணங்கி யவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3 | பதவுரை Show / Hideதுயானை, Thuyanaik - பரமபவித்திரனும் தூய மறையானை, Thuya Maraiyanai - பரிசுத்தமான வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும் தென் ஆலி மேயானை, Then Aali Meyaanai - அழகிய திருவாலிப்பதியிலே பொருந்தி வாழ்பவனும் மேவாள் உயிர் உண்டு அமுது உண்டவாயானை, Mevaal Uyir Undu Amuthu Undavayanai - பொருத்தமற்றவளான பூதனையினுடைய உயிரை உறிஞ்சியுண்டு (அந்த விஷத்திற்குமாற்றாகத் தாயின்) முலைப்பாலமுதை உண்ட வாயையுடையவனுமான மாலை, Malai - திருமாலை வணங்கி, Vanangi - அடிபணிந்து அவன், Avan - அப்பெருமானுடைய பெருமை, Perumai - பெருமேன்மையை பேசாதார், Pesathar - பேசப்பெறாதவர்களுடைய பேச்சு, Peetchu - பேச்சுக்களானவை என்றும், Endrum - ஒருகாலும் பேச்சு அல்ல, Peetchu Alla - பேச்சுக்களாகமாட்டா கேட்டோம், Kettom - (இதனை நாம் பெரியோர்களிடத்துக்) கேட்டிருக்கின்றோம். |