திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2016 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2016பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றைச் சொல்லி இன்னது உபமானம் என்ன ஒண்ணாத வடிவு – சொல்லும் இடத்தில் உபமானம் கொண்டு இழிய வேணும் – அவை தான் இதுக்குப் போராவாய் இருக்கும் – காமினிக்கு காந்தனுடைய தேஹமும் –ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லாருக்கும் படி – சங்கேந்தும் கையானைக் –தொழுகைக்கு இவன் கை போலே-தொழுவித்துக் கொள்ளுகைக்கு அவன் கை – தமச பரம -இத்யாதி – கை தொழாக் கையல்ல கண்டாமே –-தொழாக் கை கை யல்ல -என்று அந்வயம்) 5
மையார் கடலும் மணி வரையும் மா முகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே –11-7-5
பதவுரை Show / Hide
மைஆர் கடலும், Maiar Kadalum - கருங்கடலையும்
மணிவரையும், Manivaraim - நீலமணிமயமான மலையையும்
மா முகிலும், Maa Mugilum - காளமேகத்தையும்
கொய் ஆர் குவளையும், Koyi Ar Kuvalaiyum - பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும்
காயாவும், Kaayavum - காயாம்பூவையும்
போன்று, Poondru - ஒத்து
இருண்ட, Irunda - கறுத்த
மெய்யானை, Meyyanaai - திருமேனியையுடையவனும்
மெய்யம் மலையானை, Meyyam Malaiyanaai - திருமெய்யமலையில்கோயில் கொண்டிருப்பவனும்
சங்கு ஏந்தும் கையானை, Sangu Aendhum Kaianaai - திருச்சங்கை ஏந்திக்கொண்டிருக்கின்ற திருக்கையையுடையனுமான பெருமானை
தொழா, Thozha - அஞ்சலிபண்ணாத
கை, Kai - கைகளானவை
கை அல்ல, Kai Alla - கைகளேயல்ல
கண்டாம், Kandam - (இதனை நாம் நன்கு) அறிவோம்.