திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2017 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுக்கு என்று இராத-ஞான இத்ரியங்கள்-கர்ம இந்த்ரியங்கள் அனைத்துக்கும் நிர்வாஹகமான மனஸ்ஸை இரண்டு பாசுரங்களால் நிரசித்து அருளுகிறார் – தான் நினைக்கும் அவை ஒழிய நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் – ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது) 6 | கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6 | பதவுரை Show / Hideகள் ஆர், Kal Aar - தேன்பொருந்திய துழாயும், Thuzhayum - திருத்துழாயையும் கணவலரும், Kanavalarum - அலரியும் கூவிளையும், Koovilaiyum - பில்வபத்திரத்தையும் முள் ஆர், Mul Aar - முட்கள் நிரம்பிய முளரியும், Mulariyum - தாமரைப் பூவையும் ஆம்பலும், Aampalum - ஆம்பல் மலரையும் முன், Mun - கண்ணெதிரில் கண்டக்கால், Kandakkaal - பார்த்தால் புள் ஆய் ஓர் எனம் ஆய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று, Pul Aayi Oor Enam Aayi Pukku Idanthan Pon Adikku Endru - ஹாம்ஸரூபியாய் அவதரித்தவனும் வராஹ ரூபியாயவதரித்துப் பூமியைப் பேதித்தெடுத்தவனுமான எம்பெருமானுடைய திருவடிகளுக்கு உரியவையென்று உள்ளாதார், Ulladhaarkal - நினையாதவர்களுடைய உள்ளத்தை, Ullathai - நெஞ்சை உள்ளம் ஆ கொள்ளோம், Ullam Aa Kollom - நெஞ்சாகக் கொள்ள மாட்டோம் |