திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2019 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2019பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்-இரண்டையும் அறியாதவர்கள்) 8
வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட சிறியானைச் செங்கண் நெடியானைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமோ –11-7-8
பதவுரை Show / Hide
வெறி ஆர், Veri Ar - பரிமளம் மிக்க
கரு கூந்தல், Karuk Koondhal - கரிய கூந்தலையுடைய
ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளாலே
வைத்த, Vaiththa - சேமித்துவைக்கப்பட்டதாய்
உறி ஆர், Uri Aar - உறிகளிலே பொருந்தியதாய்
நறு, Naru - மணம்மிக்கதான
வெண்ணெய், Vennaiy - வெண்ணெயை
தான் உகந்து உண்ட, Thaan Ugandhu Unda - தான் விரும்பி யமுதுசெய்த
சிறியானை, Siriya Anai - சிறியவனும்
செம் கண், Sem Kan - சிவந்த திருக்கண்களையுடையனுமான
நெடியானை, Nediyaanai - ஸர்வேச்வரனை
சிந்தித்து அறியாதார், Sindhiththu Ariyathaar - நெஞ்சாலும் நினைத்தறியாதவர்கள்
என்றும், Endrum - எப்போதும்
அறியாதார், Ariyathaar - அவிவேகிகளேயாவர்
கண்டாம், Kandam - நன்கு அறிவோம்