திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2019 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்-இரண்டையும் அறியாதவர்கள்) 8 | வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானைச் செங்கண் நெடியானைச் சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமோ –11-7-8 | பதவுரை Show / Hideவெறி ஆர், Veri Ar - பரிமளம் மிக்க கரு கூந்தல், Karuk Koondhal - கரிய கூந்தலையுடைய ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளாலே வைத்த, Vaiththa - சேமித்துவைக்கப்பட்டதாய் உறி ஆர், Uri Aar - உறிகளிலே பொருந்தியதாய் நறு, Naru - மணம்மிக்கதான வெண்ணெய், Vennaiy - வெண்ணெயை தான் உகந்து உண்ட, Thaan Ugandhu Unda - தான் விரும்பி யமுதுசெய்த சிறியானை, Siriya Anai - சிறியவனும் செம் கண், Sem Kan - சிவந்த திருக்கண்களையுடையனுமான நெடியானை, Nediyaanai - ஸர்வேச்வரனை சிந்தித்து அறியாதார், Sindhiththu Ariyathaar - நெஞ்சாலும் நினைத்தறியாதவர்கள் என்றும், Endrum - எப்போதும் அறியாதார், Ariyathaar - அவிவேகிகளேயாவர் கண்டாம், Kandam - நன்கு அறிவோம் |