திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2020 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தன்னைப் பேணாது ஒழிய தங்களைப் பேணித் திரியுமவர்கள மானிடவர் அல்லர் – பிரித்து அவயவங்களைச் சொல்லுகிறது என் – கட்டடங்க மனுஷ்யர் அல்லர் – என்று என் மனத்தே வைத்தேனே –ஸ்ரீ சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே – அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஸ்ரீ ஆழ்வார் இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் – மித்ர பௌ பிகம் கர்த்தும் -என்னும் அவளிலும் இவருக்கு வாசி உண்டு – தலை தான் போனது அவனுக்கு ஸ்வரூபம் நசிக்கும் இவனுக்கு) 9 | தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9 | பதவுரை Show / Hideவண்டு, Vandu - வண்டுகளானவை தேனொடு, Thenodu - வாயில் தேனோடே ஆலும், Alum - ஆரவாரிக்கின்ற திருமாலிருஞ் சோலை, Thirumaliruncholai - திருமாலிருஞ்சோலை மலையை தான் இடம் ஆ கொண்டான், Thaan Idam Aa Kondaaan - தனக்கு இருப்பிடமாக அமைத்துக் கொண்டவனும் அன்று, Anru - முன்பொருகாலத்தில் தட, Thada - விசாலமாய் மலர், Malar - குவளைமலர்போன்ற கண்ணிக்காய், Kannikkai - கண்களையுடையளான நப்பின்னைப்பிராட்டிக்காக ஆன் விடை ஏழ், Aan Vidai Ezh - ஏழுரிஷபங்களை அடர்த்தாற்கு, Adarthaarkku - வலியடக்கின பெருமானுக்கு ஆள் ஆனார் அல்லாதார், Aal Aanaar Alladhaar - அடிமைப்பட்டவர்கள் தவிர மற்றையோர் மானடவர் அல்லர் என்று, Maanadavar Allar Endru - மநுஷ்யகோடியில் சேர்ந்தவர்களல்ல ரென்று என் மனத்து, En Manathu - என்னெஞ்சிலே வைத்தேன், Vaithen - உறுதியாகநாட்டினேன் |