திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2020 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2020பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தன்னைப் பேணாது ஒழிய தங்களைப் பேணித் திரியுமவர்கள மானிடவர் அல்லர் – பிரித்து அவயவங்களைச் சொல்லுகிறது என் – கட்டடங்க மனுஷ்யர் அல்லர் – என்று என் மனத்தே வைத்தேனே –ஸ்ரீ சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே – அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஸ்ரீ ஆழ்வார் இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் – மித்ர பௌ பிகம் கர்த்தும் -என்னும் அவளிலும் இவருக்கு வாசி உண்டு – தலை தான் போனது அவனுக்கு ஸ்வரூபம் நசிக்கும் இவனுக்கு) 9
தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9
பதவுரை Show / Hide
வண்டு, Vandu - வண்டுகளானவை
தேனொடு, Thenodu - வாயில் தேனோடே
ஆலும், Alum - ஆரவாரிக்கின்ற
திருமாலிருஞ் சோலை, Thirumaliruncholai - திருமாலிருஞ்சோலை மலையை
தான் இடம் ஆ கொண்டான், Thaan Idam Aa Kondaaan - தனக்கு இருப்பிடமாக அமைத்துக் கொண்டவனும்
அன்று, Anru - முன்பொருகாலத்தில்
தட, Thada - விசாலமாய்
மலர், Malar - குவளைமலர்போன்ற
கண்ணிக்காய், Kannikkai - கண்களையுடையளான நப்பின்னைப்பிராட்டிக்காக
ஆன் விடை ஏழ், Aan Vidai Ezh - ஏழுரிஷபங்களை
அடர்த்தாற்கு, Adarthaarkku - வலியடக்கின பெருமானுக்கு
ஆள் ஆனார் அல்லாதார், Aal Aanaar Alladhaar - அடிமைப்பட்டவர்கள் தவிர மற்றையோர்
மானடவர் அல்லர் என்று, Maanadavar Allar Endru - மநுஷ்யகோடியில் சேர்ந்தவர்களல்ல ரென்று
என் மனத்து, En Manathu - என்னெஞ்சிலே
வைத்தேன், Vaithen - உறுதியாகநாட்டினேன்