திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2021 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை – இத் திருவடிகளைச் சூடும் ஸ்ரீ ஆழ்வார் –சேஷித்வத்துக்கு அவன் ஸ்ரீ திரு வாழியைப் பிடித்தால் போலே சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி- முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் – இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்) 10 | மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10 | பதவுரை Show / Hideமெய்நின்ற, Mei Nindra - பிரகிருதியிலே அநுபவிக்க வேண்டிநின்ற பாவம், Paavam - பாவங்கள் அகல, Akala - ஒழிவதற்காக கை நின்ற ஆழியான், Kai Nindra Azhiyan - திருக்கையில் பொருந்திய திருவாழியையுடையனான திரு மாலை, Thiru Maalai - திருமகள் கொழுநனுடைய சூழும் கழல், Soolum Kazhal - ஸர்வ்வ்யாபியான திருவடிகளை சூடி, Soodi - முடிமேற்கொள்ளுமவராய் கை நின்ற வேல் கை, Kai Nindra Vel Kai - கையும் வேற்படையுமாய் நிற்பவரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Malai - சொல்மாலையாகிய ஐ ஒன்றும் ஐந்தும் இவை, Ai Ondrum Aindhum Ivai - இப்பத்துப்பாசுரங்களையும் பாடி, Paadi - வாயாரப்பாடி ஆடுமின், Aadumin - நர்த்தனம் பண்ணுங்கோள் |