திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2021 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2021பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை – இத் திருவடிகளைச் சூடும் ஸ்ரீ ஆழ்வார் –சேஷித்வத்துக்கு அவன் ஸ்ரீ திரு வாழியைப் பிடித்தால் போலே சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி- முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் – இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்) 10
மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக் கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10
பதவுரை Show / Hide
மெய்நின்ற, Mei Nindra - பிரகிருதியிலே அநுபவிக்க வேண்டிநின்ற
பாவம், Paavam - பாவங்கள்
அகல, Akala - ஒழிவதற்காக
கை நின்ற ஆழியான், Kai Nindra Azhiyan - திருக்கையில் பொருந்திய திருவாழியையுடையனான
திரு மாலை, Thiru Maalai - திருமகள் கொழுநனுடைய
சூழும் கழல், Soolum Kazhal - ஸர்வ்வ்யாபியான திருவடிகளை
சூடி, Soodi - முடிமேற்கொள்ளுமவராய்
கை நின்ற வேல் கை, Kai Nindra Vel Kai - கையும் வேற்படையுமாய் நிற்பவரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Malai - சொல்மாலையாகிய
ஐ ஒன்றும் ஐந்தும் இவை, Ai Ondrum Aindhum Ivai - இப்பத்துப்பாசுரங்களையும்
பாடி, Paadi - வாயாரப்பாடி
ஆடுமின், Aadumin - நர்த்தனம் பண்ணுங்கோள்