திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2028 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2028பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விசத்ருச த்ருஷ்டாந்தமாய் இருந்ததீ என்ன –அந்வயம் -விச்சேதத்தைப் பொறுக்கும் வ்யதிரேகம் அப்படி விச்சேதத்தைப் பொறாது இறே-அத்தைப் பற்றச் சொல்லிற்று – உன்னைக் கொண்டு விரோதியைப் போக்கிக் கொள்ள அமையும் என்று இருப்பாருக்கு விரோதியைப் போக்கிக் கொடுப்புதி – உன்னோடு அணைய வேண்டும் என்று ஆசைப் பட்டாருக்கு நித்ய சம்ச்லேஷம் பண்ணுகைக்கு உடம்பு கொடுப்புதி – நீ வேண்டா பிரயோஜனமே அமையும் என்று இருப்பாருக்கு அத்தைக் கொடுத்து உன்னையே பெற வேணும் என்று இருப்பாருக்கு உன்னைக் கொடுப்புதி – பரஞ்சோதீ – நீ அணைக்குக்கு உடம்பைக் கொடுக்காதே-ஷயத்தை வர்த்திப்பான் ஒருவன் ஆனாலும் உன்னை விடலாயோ வடிவு அழகு இருப்பது) 7
வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன் தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7
பதவுரை Show / Hide
தேம்பல், Thembal - தக்ஷமுனிவனது சாபத்தினாலுண்டான க்ஷயரோகத்தால்) உடல்தேய்ந்து மெலிந்து வருந்துதலையுடைய (- (அதுபோலவெ))
இள திங்கள், Ila Thingal - பருவம் நிரம்பாத சந்திரன
சிறை விடுத்து, Sirai Viduthu - (அந்நோயாகிய) நிறைத்துன்பத்தினின்று விடுவித்து
ஐவாய் பாம்பின் அணை பள்ளி கொண்டாய், Aivai Paambin Anai Palli Kondaai - ஐந்து தலையையுடைய ஆதிசேஷனாகிய சயனத்தில் அறிதுயில்கொண்டருள்பவனே!
பரஞ்சோதை, Paranjothai - எல்லாவொளிகளினுஞ்சிறந்த ஒளியையுடையவனெ!
வேம்பின் புழு, Vembin Puzhu - வேப்பமரத்திலுண்டான புழுவானது
வேமுபு அன்றி உண்ணாது, Vemupu Andri Unnaadhu - அம்மரத்தின் இலை முதலியவற்றைச் சுவைபட உண்ணுமேயன்றி வேறொன்றை உண்ணாது
அடியேன் நான், Adiyen Naan - உனக்கே அடிமைப்பட்டவனான நான்
பின்னும், Pinnum - நீ வெறுத்தாலும்
உன் சே அடி அன்றி நயவேன், Un Che Adi Andri Nayvaen - உனது சிவந்த திருவடிகளை யன்றி வேறொன்றை விரும்பென்.