திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2030 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2030பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பணியாய் என்றார் கீழ் பாட்டில் தத் அனுஜாநந்தம் உதார வீஷணை-என்றும் தூது செய் கண்கள் -என்ற படியும் மலர விழித்துக் கடாஷிக்க -க்ருதார்த்தராய் – சம்சார உத்தரணத்துக்கு சம்சயம் உண்டோ என்று கொண்டு உமக்குத் திரு உள்ளம் ஆனபடி என் மநோ ரதத்தை தலைக் கட்டி அருள பிரார்த்திக்கிறார் -என்று சங்கதி) 9
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய் சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே –11-8-9
பதவுரை Show / Hide
நந்தா நரகத்து, Nandha Narakathu - அழயாத்தொரு நரகமாகிற பிறவித்துயரத்திலே
அழுந்தா வகை, Azhundha Vagai - மூழ்கிக்கிடக்க வேண்டாதபடி
நாளும், Naalum - எப்பொழுதும்
தொண்டர் ஆனவர்க்கு, Thondar Aanavarkku - உனது அடியவரானவர்களுக்கு
இன் அருள் செய்வாய், In Arul Seivai - இனிமையான கருணையைச் செய்யுமியல்வுடையவனே!
எந்தாய், Endhai - எமது தந்தையே!
சந்தோகா, Santhokha - வேதங்களையெல்லாம் அறிந்தவனே!
தலைவனெ, Thalaivaney - மேம்பட்டவனெ!
தாமரை கண்ணா, Thamarai Kanna - செந்தாமரைமலர்போன்ற திருக்கண்களை யுடையவனே!
அந்தோ, Andho - ஐயோ!
அடியெற்கு, Adiyerkku - அடியேனுக்கு
உன் அருள், Un Arul - உனது கிருபையை
அருளாய், Arulai - செய்தருள்