திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2031 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்-வாசனையோடு கழியும் படி அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் – இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்-அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும் சொல்ல வல்லவர்களுக்கு – பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து-மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு-ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி – சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து பின்னையும்-வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று பிரார்த்தித்த படியே சவாசனமாகக் கழியும்) 10 | குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே –11-8-10 | பதவுரை Show / Hideகுற்றம் எடுத்து, Kutram Eduthu - (கோவர்த்தன) மலையைக் குடையாகவெடுத்துப் பிடித்து (- (அது கொண்டு பெருமழையைத் தடுத்து)) ஆ நிரை, A Nirai - பசுக்கூட்டத்தை காத்தவன் தன்னை, Kaaththavan Thannai - பாதுகாத்தவனான எம்பெருமானைக்குறித்து மன்றில் புகழ், Manril Pugazh - சபைகளில் புகழப்படுவராய் மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் சொல், Sol - அருளிச்செய்த ஒன்று நின்ற ஒன்பதும், Onru Nindra Onpathum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர் தம் மேல், Vallavar Tham Mel - ஓதியுணர்ந்தவர்களின் மேல் வினை ஆயின, Vinai Aayina - கருமங்கள் என்றும், Endrum - எப்பொழுதும் சார கில்லா, Saar Killa - அணுகிப் பயன்விளைக்கமாட்டா |