திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2031 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2031பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்-வாசனையோடு கழியும் படி அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் – இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்-அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும் சொல்ல வல்லவர்களுக்கு – பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து-மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு-ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி – சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து பின்னையும்-வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று பிரார்த்தித்த படியே சவாசனமாகக் கழியும்) 10
குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல் ஒன்றும் வினையாயின சார கில்லவே –11-8-10
பதவுரை Show / Hide
குற்றம் எடுத்து, Kutram Eduthu - (கோவர்த்தன) மலையைக் குடையாகவெடுத்துப் பிடித்து (- (அது கொண்டு பெருமழையைத் தடுத்து))
ஆ நிரை, A Nirai - பசுக்கூட்டத்தை
காத்தவன் தன்னை, Kaaththavan Thannai - பாதுகாத்தவனான எம்பெருமானைக்குறித்து
மன்றில் புகழ், Manril Pugazh - சபைகளில் புகழப்படுவராய்
மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொல், Sol - அருளிச்செய்த
ஒன்று நின்ற ஒன்பதும், Onru Nindra Onpathum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர் தம் மேல், Vallavar Tham Mel - ஓதியுணர்ந்தவர்களின் மேல்
வினை ஆயின, Vinai Aayina - கருமங்கள்
என்றும், Endrum - எப்பொழுதும்
சார கில்லா, Saar Killa - அணுகிப் பயன்விளைக்கமாட்டா