திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2032 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2032திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானுடைய பெருமைகளைப் பன்னி யுரைத்து, என்னெஞ்சிலே வந்து புகுந்த இப்பெருமானை இனி நான் ஒருநாளும் விடமாட்டுகின்றிலே னென்கிறார்– 1
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார், கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் ஆண்ட மாளும், மதியினை மாலை வாழ்த்தி வணங்கி யென் மனத்து வந்த, விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே!
பதவுரை Show / Hide
நிதியினை, Nithiyinai - (அன்பர்கட்கு) நிதிபோன்றவனும்
பவளம் துணை, Pavalam Thunai - பவளம்போல் இனியேனும் தூண் போல் தாரகனும்
நெறிமையால், Nerimaiyaal - ஒரு நெறிப்பட்டுச் சிந்திக்க வல்ல வர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும்
முன், Mun - முன்பு
கஞ்சன் மாளகண்டு, Kanjan Maalakandu - கம்ஸன் முடிந்து போம்படி செய்து
அண்டம், Andam - உலகங்களை
ஆளும், Aalum - ரக்ஷித்தருளினவனும்
மதியினை, Madhiyinai - (அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும்
மாலை, Maalai - அடியார் திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும்
வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை, Vaazhththi Vanangi En Manaththu Vanda Vidhiyinai - நான் வாழ்த்தி வணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை
கண்டு கொண்ட, Kandu Konda - ஸேவிக்கப் பெற்ற
தொண்டனேன், Thondanen - அடியேன்
விடுகிலேன், Vidugilena - (இனி ஒருநாளும்) விடமாட்டேன்.