திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2033 | திருக்குறுந்தாண்டகம் || தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார்; நெஞ்சே! எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை அநுஸந்திக்கப் பார் என்றார்; அப்படியே அது அநுஸந்திக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு ‘நெஞ்சே! நீ அநுஸந்திக்கும் விதம் என்னே!‘ என்று ஈடுபடுகிறார். 2 | காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற
ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப
ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட
கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே. | பதவுரை Show / Hideகாற்றினை புனலை தீயை, Kaatrinai Punalai Theei - காற்று நீர் தீ முதலான பஞ்ச பூதமயமான ஜகத்தை சரீரமாக வுடையவனும் கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை, Kadi Mathil Ilangai Settra Aetrinai - அரணாகப் போரும்படியான மதிளை யுடைத்தான இலங்காபுரியை முடித்த காளை போன்றவனும் இமயம் மேய, Imayam Maeya - இமயமலையில் (திருப்பிரிதியிலே) பொருந்தி வாழ்கிறவனும் எழில் மணி திரளை, Ezhil Mani Thiralai - அழகிய மணித்திரள் போன்றவனும் இன்பம் ஆற்றினை, Inbam Aatrinai - (வடிவெடுத்த) ஆனந்த வெள்ளமாயிருப்பவனும் அமுதம் தன்னை, Amudham Thannai - போனவுயிரை மீட்கவல்ல அமுதம் போன்றவனும் அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அசுரனுடைய ஆர் உயிரை, Ar Uyirai - அருமையான உயிரை உண்ட, Unda - கவர்ந்த கூற்றினை, Kootrinai - ம்ருத்யுவமான எம்பெருமானை உள்ளம், Ullam - நெஞ்சமே! குணம் கொண்டு, Gunam Kondo - திருக்குணங்களை முன்னிட்டு கூறு, Koora - அநுஸந்திக்கப்பார்; (என்று தாம் சொன்னதும் அப்படியே அநுஸந்தித்த நெஞ்சை நோக்கி) நீ கூறும் ஆறே, Nee Koorum Aare - நீ அநுஸந்தித்த விதம் என்னே! (என்று ஈடுபடுகிறடி.) |