திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2034 | திருக்குறுந்தாண்டகம் || தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும் திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிரா நி்ன்றான் எம்பெருமான்; விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய திருப்பதிகளிலே கோயில் கொண்டிரா நின்றான்; அன்னவனை வணங்கி யுய்ந்தேனென்கிறார். 3 | பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே. | பதவுரை Show / Hideபாய் இரு பரவை தன்னுள், Pai Iru Paravai Thannul - பரந்து ஆழ்ந்த திருப்பாற்கடலிலே பரு வரை, Paru Varai - பெரியதான (மந்தர) மலையை திரித்து, Thirithu - சுழலச்செய்து (கடல் கடைந்த) வானோர்க்கு ஆய் இருந்து, Vaanorkku Aay Irundhu - தேவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து அமுதம் கொண்ட, Amudham Konda - அமுதமெடுத்துக் கொடுத்தருளின அப்பனை, Appanai - உபகாரகனும் எம் பிரானை, Em Piranai - எமக்கு ஸ்வாமியானவனும் இரு, Iru - மிகப்பெரிய வேய் சோலை சூழ்ந்து, Veiy Cholai Soozhndu - மூங்கிற் சோலைகளாலே சூழப்பட்டு (அதனால்) விரி கதிர் இரிய நின்ற, Viri Kathir Iriya Nindra - ஸூர்யன் கண்ணுக்குத் தெரியாதபடி யிருக்கப்பெற்ற மாயிருஞ் சோலை, Mayirunj Cholai - திருமாலிருஞ்சோலை மலையிலே மேய, Meya - நித்ய வாஸம் செய்தருள்கிற மைந்தனை, Maindhanai - மிடுக்கனுமான ஸர்வேச்ரனை வணங்கினேன், Vananginenae - வணங்கப்பெற்றேன். |