திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2038 | திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ”அமரர் சென்னிப் பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக் காட்டும்‘ என்ன; என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தை செய்யுந் தொண்டர்களே என் தலை மிசை மன்னுதற்கு உரியார் என்கிறார் போலும். 7 | இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே | பதவுரை Show / Hideஎமக்கு, Emakku - நமக்கு இம்மையை, Immayai - இவ் வுலகத்து இன்பத்தைத் தருமவனும் மறுமை தன்னை, Marumai Thannai - பரலோகத்து இன்பத்தைத் தருமவனும் விரிந்த சோலை, Virintha Solai - பரந்த சோலைகளை யுடையதாய் வியன், Viyan - ஆச்சரியமான திரு அரங்கம், Thiru Arangam - ஸ்ரீரங்கத்திலே மேய, Meya - நித்ய வாஸம் பண்ணுமவனும் செம்மையை கருமை தன்னை திருமலை, Semmaiye Karumai Thannai Thirumalai - (யுக பேதத்தாலே) செந் நிறத்தையும் கரு நிறத்தையுங் கொண்டுள்ளவனும் திருமலை, Thirumalai - திருவேங்கடமலையிலே நின்று கொண்டு ஒருமையானை, Orumaiyanai - (மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்) ஒருமைப்பட்டிருப்பவனுமான எம்பெருமானுடைய தன்மையை, Thanmaiyai - சீலத்தை நினைவார், Ninaivaar - நினைக்க வல்லவர்கள் என் தன், En Than - என்னுடைய தலை மிசை, Thalai Misai - தலையிலே மன்னுவார், Mannuvaar - பொருந்தத் தக்கவர்கள் |