திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2038 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2038திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ”அமரர் சென்னிப் பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக் காட்டும்‘ என்ன; என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தை செய்யுந் தொண்டர்களே என் தலை மிசை மன்னுதற்கு உரியார் என்கிறார் போலும். 7
இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத் தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே
பதவுரை Show / Hide
எமக்கு, Emakku - நமக்கு
இம்மையை, Immayai - இவ் வுலகத்து இன்பத்தைத் தருமவனும்
மறுமை தன்னை, Marumai Thannai - பரலோகத்து இன்பத்தைத் தருமவனும்
விரிந்த சோலை, Virintha Solai - பரந்த சோலைகளை யுடையதாய்
வியன், Viyan - ஆச்சரியமான
திரு அரங்கம், Thiru Arangam - ஸ்ரீரங்கத்திலே
மேய, Meya - நித்ய வாஸம் பண்ணுமவனும்
செம்மையை கருமை தன்னை திருமலை, Semmaiye Karumai Thannai Thirumalai - (யுக பேதத்தாலே) செந் நிறத்தையும் கரு நிறத்தையுங் கொண்டுள்ளவனும்
திருமலை, Thirumalai - திருவேங்கடமலையிலே நின்று கொண்டு
ஒருமையானை, Orumaiyanai - (மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்) ஒருமைப்பட்டிருப்பவனுமான எம்பெருமானுடைய
தன்மையை, Thanmaiyai - சீலத்தை
நினைவார், Ninaivaar - நினைக்க வல்லவர்கள்
என் தன், En Than - என்னுடைய
தலை மிசை, Thalai Misai - தலையிலே
மன்னுவார், Mannuvaar - பொருந்தத் தக்கவர்கள்