திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2039 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2039திருக்குறுந்தாண்டகம் || ஸம்ஸாரிகள் தேஹத்தைப் பூண் கட்டிக் கொள்ள விருக்கிறார்களே யன்றி எம்பெருமானை மருவி வாழ்வாரில்லையே! என வருந்திப் பேசுகிறார். 8
வானிடைப் புயலை மாலை வரை யிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார் மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே
பதவுரை Show / Hide
வானி்டை புயலை, Vaanidai Puyalai - ஆகாசத்திலே வாழ்கிற மேகம் போன்ற வடிவுடையவனும்
மாலை, Maalai - (அடியார் திறத்தில்) வியாமோஹமுடையவனும்
வரையிடே, Varaiyide - மலையிலே
பிரசம் ஈன்ற, Piracham Eendra - தேனீக்களாலே சேர்க்கப்பட்ட
மானிடம் பிறவி, Maanidam Piravi - (தாங்கள் மிக அருமையான) மநுஷ்ய ஜன்மமெடுத்திருப்பதை
மதி்க்கிலர், Mathikkilar - எண்ணுகிறார்களில்லை;
அந்தோ, Andho - ஐயோ! ;
தம் தம், Tham Tham - தங்கள் தங்களுடைய
தேன் இடை, Then Idai - தேனீலே முளைத்த
கரும்பின், Karumpin - கரும்பினுடைய
சாற்றை, Saatrai - சாறு போலப் பரம போக்யனும்
திருவினை, Thiruvinai - திருவுக்குந் திருவாகிய செல்வனுமான எம்பெருமானை
மருவி, Maruvi - ஆச்ரயித்து வாழ மாட்டார்கள்–
ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு, Unidai Kurampai Vaalkaikku - மாம்ஸமயமான சரீரத்தில் வாழ்வதற்கு
உறுதியே, Urudhiye - உறுதியையே
வேண்டினார், Veandinar - விரும்பி நிற்கின்றார்கள்;
கொள்க, Kolga - (இதை நீங்கள்) அறிந்து வைப்பது.