திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2040 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2040திருக்குறுந்தாண்டகம் || நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார். என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது; இதற்கு நான் செய்து கொள்ளக் கூடிய பரிஹார மொன்றுமில்லை; நீயே துணை நிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார். 9
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும் கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம் தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட ஒள்ளயீர் உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே
பதவுரை Show / Hide
உள்ளமோ, Ullamo - மனமோ வென்னில்
ஒன்றில் நில்லாது, Onril Nilladhu - ஒரு விஷயத்திலும் பொருந்தி நிற்கிறதில்லை;
ஓசையின் எரி, Osaiyin Eri - ஓசையோடு கூடின அக்னி
நின்று உண்ணும், Ninru Unnum - கவ்வி நின்று உண்ணப் பெற்ற
கொள்ளிமேல், Kollimeel - கொள்ளியில் அகப்பட்ட
எறும்பு போல, Erumbu Pola - எறும்பு போலே
என் தன் உள்ளம், En Than Ullam - எனது நெஞ்சானது
குழையும், Kuzhaiyum - நைகின்றது;
ஆல், Aal - அந்தோ! ;
தெள்ளியீர், Thelliyeer - தெளிந்த ஸ்வபாவத்தை யுடையீராய்
தேவர்க்கு எல்லாம் தேவர் ஆய், Thevarkku Ellam Thevar Aay - தேவாதி தேவனாயிருந்து வைத்து
ஒள்ளியீர், Olliyeer - தேஜஸ்வி யானவரே!
எழுமையும், Ezhumaiyum - எந்த நிலைமையிலும்
உம்மை அல்லால், Ummmai Allaal - தேவரீரைத் தவிர்த்து
துணை இலோம், Thunai Ilom - வேறு துணை யற்றவர்களாய் இருக்கின்றோம்.