திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2042 | திருக்குறுந்தாண்டகம் || என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ? நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்– 11 | தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே | பதவுரை Show / Hideஎந்தாய், Endhai - எம்பெருமானே!, தொண்டு எல்லாம், Thondu Ellam - எல்லாவகையான அடிமைகளையும் பரவி, Paravi - (செய்யவேணும் செய்ய வேணுமென்பதாக) வாயாரப் பேசி நின்னை தொழுது, Ninnai Thozhudhu - உன்னை வணங்கி அடி பணியும் ஆறு கண்டு, Adi Paniyum Aaru Kandu - திருவடிகளிலே பணிவிடை செய்யும் படிகளை மநோ ரதித்து தான் கவலை தீர்ப்பான் ஆவதே, Thaan Kavalai Theerppaan Aavadhe - நான் மனக் கவலை தீர்த்துக் கொள்ள முடியுமோ? பணியாய், Paniyai - அருளிச் செய்ய வேணும்; அண்டம் ஆய், Andam Aay - அண்டங்களிலுள்ளாரெல்லார்க்கும் தலைவனாய் எண் திசைக்கும் ஆதி ஆய், En Thisaikkum Aadhi Aai - எட்டுத் திசைகளிலுள்ள தேவதை கட்கும் காரண பூதனாய் நீதி ஆன பண்டம் ஆம், Neethi Aana Pandam Aam - முறைமையான செல்வமாயிருப்பவனான பரம சோதி, Parama Sothi - பரஞ்சோதியே! நின்னையே, Ninnaiye - உன்னையே பரவுவேன், Paravuvein - ஸ்தோத்ரம் பண்ணுவேன். |