திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2042 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2042திருக்குறுந்தாண்டகம் || என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ? நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்– 11
தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே
பதவுரை Show / Hide
எந்தாய், Endhai - எம்பெருமானே!,
தொண்டு எல்லாம், Thondu Ellam - எல்லாவகையான அடிமைகளையும்
பரவி, Paravi - (செய்யவேணும் செய்ய வேணுமென்பதாக) வாயாரப் பேசி
நின்னை தொழுது, Ninnai Thozhudhu - உன்னை வணங்கி
அடி பணியும் ஆறு கண்டு, Adi Paniyum Aaru Kandu - திருவடிகளிலே பணிவிடை செய்யும் படிகளை மநோ ரதித்து
தான் கவலை தீர்ப்பான் ஆவதே, Thaan Kavalai Theerppaan Aavadhe - நான் மனக் கவலை தீர்த்துக் கொள்ள முடியுமோ?
பணியாய், Paniyai - அருளிச் செய்ய வேணும்;
அண்டம் ஆய், Andam Aay - அண்டங்களிலுள்ளாரெல்லார்க்கும் தலைவனாய்
எண் திசைக்கும் ஆதி ஆய், En Thisaikkum Aadhi Aai - எட்டுத் திசைகளிலுள்ள தேவதை கட்கும் காரண பூதனாய்
நீதி ஆன பண்டம் ஆம், Neethi Aana Pandam Aam - முறைமையான செல்வமாயிருப்பவனான
பரம சோதி, Parama Sothi - பரஞ்சோதியே!
நின்னையே, Ninnaiye - உன்னையே
பரவுவேன், Paravuvein - ஸ்தோத்ரம் பண்ணுவேன்.