திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2043 | திருக்குறுந்தாண்டகம் || பரம புருஷனான எம்பெருமானை மிகவும் அபரிசுத்தனான நான் எனது எச்சில் வாயால் ஸங்கீர்த்தனம் பண்ணி ‘ ஐயோ! இப்படி அபசாரப்பட்டோமே!‘ என்று அஞ்சின என்னுடைய அச்சம் தீர அப்பெருமான் வந்து என் கண்ணுள்ளே தோன்றி அபயமளித்தானென்கிறார். 12 | ஆவியயை யரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்,
தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்,
பாவியேன் பிழைத்தவாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே. | பதவுரை Show / Hideஆவியை, Aaviye - உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும் அரங்கம் மாலை, Arangam Maalai - திருவரங்கத்தி லுள்ளவனுமான எம்பேருமானைக் குறித்து, அழுக்கு உடம்பு எச்சில் வாயால், Azhukku Udambu Echil Vaayal - இவ் வழுக்குடம்பின் எச்சில் வாயினால் தூய்மை இல் தொண்ட நான், Thuymai Il Thonda Naan - அபரிசுத்தனும் கண்ட விடங்களில் தொண்டு பட்டவனுமான நான் தொல்லை நாமம், Thollai Naamam - அநாதியான திருநாமங்களை சொல்லினேன், Sollinain - சொன்னேன்; பாவியேன் பிழைத்த ஆறு என்று அஞ்சினேற்கு, Paaviyen Pizhaitha Aaru Endru Anjineerku - பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று அநுதாபமுற்ற வெனக்கு அஞ்சல் என்று, Anjal Endru - அபயமளித்து காவி போல், Kaavi Pol - கருங் குவளை நிறத்தரான வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினார், Vannaar Vandu En Kan Ullae Thonrinaar - என் கண்களினுள்ளே ஸேவை ஸாதித்தார். |