திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2044 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2044திருக்குறுந்தாண்டகம் || தம்மை விட்டு ஒருகாலும் பிரிக்கக்கூடாமலிருந்த அரும்பிணி பாவமெல்லாம் அகன்று போன ஆச்சரியத்தினால் இரும்பனன்றுண்ட நீரும் போதரும் என்கிறார். 13
இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன் அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச் சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே
பதவுரை Show / Hide
இரும்பு, Irumbu - இரும்பானது
அனன்று, Anandru - பழுக்கக் காய்ச்சப் பெற்று
உண்ட, Unda - உட் கொண்ட
நீரும், Neerum - ஜலமும்
போதரும், Podharum - வெளியிலே வந்து விடும்;
கொள்க, Kolga - (இதை) உறுதியாக நினையுங்கோள்;
என் தன், En Than - என்னுடையவையாய்
அரு, Aru - போக்கமுடியாதவையாய்
பிணி பாவம் எல்லாம், Pini Paavam Ellam - நோய்களுக்கு அடியான பாவங்களெல்லாம்
என்னை விட்டு அகன்றன, Ennai Vittu Aknranan - என்னை விட்டு நீங்கிப் போயின
கரும்பு அமர், Karumbu Amar - வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த, Solai Soozhntha - சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம், Maa Arangam - மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட, Koyil Konda - இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிற
கரும்பினை, Karumbinai - பரம போக்யனான எம்பெருமானை
என் கண் இணை, En Kan Inai - எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு, Kandu Kondo - பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறு ஏ, Kalikkum Aaru Ae - மகிழ்ச்சி யடையும் விதம் என்னே! (என்று வியக்கிறார்)