திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2046 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2046திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி; அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்; இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும். 15
முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும் அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே
பதவுரை Show / Hide
முன், Mun - முன் பொருகால்
பொலா, Polaa - பொல்லாதவனான
இராவணன் தன், Iraavanan Than - இராவணனுடைய
முது மதிள் இலங்கை, Muthu Mathil Ilangai - வலிய மதிள்களை யுடைத்தான இலங்கா புரியை
வேவித்து, Veviththu - சுடுவித்து
அனுமன், Anuman - சிறிய திருவடி
அன்பினால் வந்து, Anbinhaal Vandu - மகிழ்ச்சியுடனே வந்து
ஆங்கு, Aangu - கிஷ்கிந்தையாலே
அடி இணை பணிய, Adi Inai Paniya - உபய பாதங்களையும் தொழும்படியாக
நின்றாற்கு, Nindraarku - நின்ற பெருமானுக்கு
அடியனேன், Adiyanen - அடியேன்
என்பு எலாம், Enbu Elam - எலும்பெல்லாம்
உருகி, Urugi - உருகி
உக்கிட்டு, Ukkittu - இற்றுப் போய்
என்னுடை, Ennudai - என்னுடைய
நெஞ்சம் என்னும், Nenjam Ennum - நெஞ்சென்று சொல்லப் படுகிற
அன்பினால், Anbinhaal - ஆர்வத்தினால்
ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன், Nyanam Neer Kondo Aattuvan - ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன்.