திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2047 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2047திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப்பாட்டிலே திருமஞ்சனம் பண்ணினார்; இப்பாட்டிலே திருமாலை சூட்டுகிறார். முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்; “மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்; “மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம். “வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம். “அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம். 16
மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம் தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும் தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே
பதவுரை Show / Hide
மாயம், Maayam - மாயச் செய்கையை யுடைய
மான், Maan - மாரீசனாகிற மான்
மாய, Maaya - முடியும்படி
செற்று, Settru - கொன்றவனாயும்
மருது, Maruthu - (இரட்டை) மருத மரங்கள்
இற, Ira - முறிந்து விழும்படி
நடந்து, Nadandhu - நடை கற்றவனாயும்
வையம் தாய், Vaiyam Thaai - (த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யளந்து கொண்டவனாயும்
அப்படி, Appadi - அப்படிப்பட்ட
மா, Maa - பெரிதான
பரவை, Paravai - கடலானது
பொங்க, Ponga - பொங்கும் படியாக
தட வரை, Thada Varai - பெரிதான மந்தர பர்வதத்தை
திரித்து, Thirithu - சுழலச் செய்து (அமுதமெடுத்து)
வானோர்க்கு, Vaanorkku - தேவர்களுக்கு
ஈயும், Eeyum - கொடுத்தவனாயுமுள்ள
மால், Maal - ஆச்ரித வ்யாமோஹ சாலியான
எம் பிரானாருக்கு, Em Piranaarukku - எம்பெருமானுக்கு
சொற்கள் என்னும், Sorkkal Ennum - வாய்மொழிகளாகிற
தூய, Thuya - பரிசுத்தமான
மா மாலை கொண்டு, Maa Maalai Kondu - சிறந்த மாலையைக் கொண்டு
தொண்டனேன், Thondanen - அடியேன்
சூட்டுவேன், Sootuvein - சூட்டுவேன்