திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2049 | திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானை ஸ்வ ப்ரயுத்நத்தால் காண விரும்பும் அவர்களின் விருப்பம் ஒரு நாளும் கை கூடா தென்கிறார் 18 | இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே | பதவுரை Show / Hideஇளைப்பினை இயக்கம் நீக்கி, Ilaippinai Iyakkam Neekki - க்லேசங்களினுடைய ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (ஓர் ஆஸனத்தில்) இருந்து, Irundhu - அசைவின்றி யிருந்து முன் இமையை கூட்டி, Mun Imaiyai Koottu - மேல் இமையைக் (கீழிமையோடே) சேர்த்து அளப்பு இல் ஐம்புலன் அடக்கி, Alappu Il Aimpulan Adakki - அளவிறந்த பஞ்சேந்திரியங்களைப் பட்டி மேய வொட்டாதபடி தடை செய்து அவர் கண், Avar Kan - எம்பெருமான் விஷயத்திலே துளக்கம் இல் சிந்தை நெய்து அன்பு வைத்து, Thulakkam Il Sindhai Neithu Anbu Vaiththu - இடை வீடில்லாத ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான பக்தியைப் பண்ணி ஆங்கு, Aangu - அந்த நிலைமையிலே சுடர் விட்டு தோன்றலும், Sudar Vittu Thonralum - ஜ்வலித்துக் கொண்டு தோன்றுமளவிலே விளக்கினை, Vilakkini - விளக்காகிய எம்பெருமானை விதியில், Vidhiyil - சாஸ்திர விதிப்படியே காண்பார், Kaanpaar - காண வேணுமென்றிருக்கிற உபாஸகர்கள் மெய்ம்மையே, Meimmaiye - உள்ளபடியே காண்கிற் பாரே, Kaangir Pare - காண வல்லவராவரோ? (காணகி்ல்லார் என்றபடி) |