திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2049 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2049திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானை ஸ்வ ப்ரயுத்நத்தால் காண விரும்பும் அவர்களின் விருப்பம் ஒரு நாளும் கை கூடா தென்கிறார் 18
இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே
பதவுரை Show / Hide
இளைப்பினை இயக்கம் நீக்கி, Ilaippinai Iyakkam Neekki - க்லேசங்களினுடைய ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (ஓர் ஆஸனத்தில்)
இருந்து, Irundhu - அசைவின்றி யிருந்து
முன் இமையை கூட்டி, Mun Imaiyai Koottu - மேல் இமையைக் (கீழிமையோடே) சேர்த்து
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி, Alappu Il Aimpulan Adakki - அளவிறந்த பஞ்சேந்திரியங்களைப் பட்டி மேய வொட்டாதபடி தடை செய்து
அவர் கண், Avar Kan - எம்பெருமான் விஷயத்திலே
துளக்கம் இல் சிந்தை நெய்து அன்பு வைத்து, Thulakkam Il Sindhai Neithu Anbu Vaiththu - இடை வீடில்லாத ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான பக்தியைப் பண்ணி
ஆங்கு, Aangu - அந்த நிலைமையிலே
சுடர் விட்டு தோன்றலும், Sudar Vittu Thonralum - ஜ்வலித்துக் கொண்டு தோன்றுமளவிலே
விளக்கினை, Vilakkini - விளக்காகிய எம்பெருமானை
விதியில், Vidhiyil - சாஸ்திர விதிப்படியே
காண்பார், Kaanpaar - காண வேணுமென்றிருக்கிற உபாஸகர்கள்
மெய்ம்மையே, Meimmaiye - உள்ளபடியே
காண்கிற் பாரே, Kaangir Pare - காண வல்லவராவரோ? (காணகி்ல்லார் என்றபடி)