திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2051 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2051திருக்குறுந்தாண்டகம் || தேவர்கட்கு இறைவனான இந்திரனும் திருநாபிக் கமலத்தில் தோன்றிய நான் முகக் கடவுளும் இடைவிடாது நன் மலர்களைப் பணிமாறி ஸ்துதிக்கப் பெற்றிருக்கின்ற செங்கண்மால் விஷயமாகக் கொற்ற வேற் பரகாலன் கலியன் சொன்ன இவ்விருபது பாசுரங்களையும் ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்யப்ரயோஜநராய்க் கற்று வல்லவர்கள் தெளிவிசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டினாராயிற்று. 20
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும் ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே
பதவுரை Show / Hide
வானவர் தங்கள் கோனும், Vaanavar Thangal Koonum - தேவேந்திரனும்
மலர்மிசை அயனும், Malar Misai Ayanum - பூவிற் பிறந்த பிரமனும்
நாளும், Naalum - நாள் தோறும்
தே மலர் தூவி, The Malar Thoovi - தேன்மிக்க புஷ்பங்களைப் பணிமாறி
ஏத்தும், Aethum - துதிக்கும் படியாக வுள்ள
சே அடி, Sae Adi - செவ்விய திருவடிகளை யுடையனாய்
செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனான
மாலை, Maalai - ஸர்வேச்வரனைக் குறித்து,
மானம் வேல், Maanam Vel - பெருமை தங்கிய வேற் படையை யுடையரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
வண் தமிழ், Van Tamil - செந்தமிழினாலாகிய
மாலை நாலைந்தும், Maalai Naalaindhum - இப்பாசுரமிருபதையும்
ஊனம் அது இன்றி, Unam Adhu Inri - குறையொன்று மில்லாமல்
வல்லார் தாம், Vallar Thaam - கற்று வல்லவர்கள்
ஒளி விசும்பு, Oli Visumbu - பரமபதத்தை
ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்