| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2060 | திரு நெடும் தாண்டகம் || எம்பெருமானே! நீ திருப்பதிகளில் கோயில் கொண்டிருக்குமழகையும் அஹங்காரிகளுக்கும் திருமேனியிலே இடங்கொடுத்திருக்கும் சீலத்தையும் வாய் வெருவிக் கொண்டு திரிவேன் நான் என்கிறார். 9 | வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய் மதிள்கச்சி யூராய். பேராய், கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான், பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா, எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழி தரு கேனே. - 9 | வங்கத்தால்,Vangaththaal - கப்பல்களினால் மா மணி,Maa Mani - சிறந்த ரத்னங்களை வந்து,Vandhu - கொண்டு வந்து உந்து,Undhu - தள்ளுமிடமான முந்நீர்,Munnir - கடற்கரையிலுள்ள மல்லையாய்,Mallaiyaai - திருக்கடன் மல்லையில் வாழ்பவனே! மதிள் கச்சி ஊராய்,Mathil Kachchi Ooraai - மதிள்களையுடைய திருக்கச்சிப்பதியில் (திருவெஃகாவில்) உறைபவனே! பேராய்,Paeraai - திருப்பேர்நதராளனே! கொங்குஆர்,Kongu Aar - தேன்நிறைந்ததும் வளம்,Valam - செவ்விபெற்றதுமான கொன்றை அலங்கல்,Kondrai Alangal - கொன்றை மாலையை மார்வன்,Maarvan - மார்விலே யுடையனும் குலம் வரையின் மடப்பாவை இடப்பால் கொண்டான்,Kulam Varaiyin Madappaavai Idappaal Kondaan - பர்வதராஜபுத்ரியான பார்வதியை இடது பக்கமாகக் கொண்டவனுமான சிவபிரானை பங்கத்தாய்,Pangaththaai - (வலது) பக்கத்திலுடையவனே! பால் கடலாய்,Paal Kadal Aai - திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருள்பவனே! பாரின் மேலாய்,Paarin Maelaai - (ராமக்ருஷ்ணாதிருபேண அவதரித்து) பூமியில் ஸஞ்சரித்தவனே! பனி வரையின் உச்சியாய்,Pani Varaiyin Uchciyaai - குளிர்ச்சியே வடிவான திருமலையினுச்சியில் நிற்பவனே எங்கு உற்றாய்,Engu Utrraai - எங்கிருக்கிறாய்? பவளவண்ணா,Pavala Vannaa - திருப்பவளவண்ணனே! எம்பெருமான்,Emperumaan - எம்பிரானே! ஏழையேன்,Eaazhaiyaen - மிகவும் சபலனாகிய அடியேன் உன்னை நாடி ,Unnai Naadi - உன்னைத் தேடிக்கொண்டு இங்ஙனமே,Ingnganamae - இவ்வண்ணமாகவே உழிதருகேன்,Uzhitharukaen - அலைச்சல்படாநின்றேன். |