Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2083 (2 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2083முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் சொன்னோம் ஆனோம் – ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய் இருந்ததோ – அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் 2
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், – அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.
கடல் கடைந்தது,Kadal Kadaindhathu - (தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது
2083முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் சொன்னோம் ஆனோம் – ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய் இருந்ததோ – அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் 2
என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன் நான் -அன்று அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்
என்று,Enru - எந்த நாள்?
நீர் ஏற்றது,Neer Aetrathu - (மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது
எ உலகம்,E Ulagam - எந்த உலகம்?
அதனை,Adhanai - அவற்றை
நான் ஒன்றும் உணரேன்,Naan Ondrum Unaraen - நான் அடியோடு அரிகின்றிலேன்;
அது,Adhu - அந்தக் கடலானது
அன்று,Andru - ஸ்ரீராமாவதார காலத்தில்
அடைத்து,Adaiththu - மலைகளைக்கொண்டு திருவணைகட்டித் தூர்த்து
உடைத்து,Udaiththu - (இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து.
கண்படுத்த,Kanpadutha - எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற
ஆழி,Aazhi - ஸமுத்ரமாம்;
இது,Idhu - (நீரேற்றுப்பெற்ற) இவ்வுலகமானது
நீ,Nee - ஸர்வேச்வரனான உன்னாலே
படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டிக்கப்பட்டும்
இடந்து,Idandhu - (வராஹாவதார காலத்தில் அண்டபித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும்
உண்டு,Undu - (பிரளய வெள்ளம் கோத்தபோது) திருவயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும்
உமிழ்ந்த,Umizhndha - பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான
பார்,Paar - பூமியாகும்.