Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2084 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2084முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ்வோவ பதானங்கள் எல்லாம் வேணுமோ -இதுக்கு அவனே நிர்வாஹகன் என்கைக்கு அதி மானுஷமான இது ஒரு செயலும் அமையாதா என்கிறார் 3
பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி
ஓர் அடி,Oor Adi - ஒரு திருவடியை
பார் அளவும் வைத்து,Paar Alavum Vaiththu - பூமிப்பரப்பு உள்ளவரையிலும் போரும்படி வைக்க
ஓர் அடியும்,Oru Adiyum - மற்றொரு திருவடியும்
பார் உடுத்த,Paar Uduththa - இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கிற
நீர் அளவும்,Neer Alavum - ஆவரண ஜலம் வரையில்
செல்ல,Sella - செல்லும்படி
நிமிர்ந்தது,Nimirndhadhu - ஓங்கிற்று;
சூர் உருவின் பேய்,Soor Uruvin Pei - தெய்வமகளான யசோதையின் வடிவுகொண்டு வந்த பூதனையை
அளவுகண்ட பெருமான்,Alavukanda Perumaan - முடித்த ஸ்வாமியியே!
நீ அளவு கண்டநெறி,Nee Alavu Kandanerhi - நீ உலகளந்த விதத்தை
அறிகிலேன்,Arikilain - அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன்.