| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2085 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் தான் தந்த வெளிச் சிறப்பு உடைய நான் இன்னும் நீச்சு நீரிலே புக்கப் போலே அலமரா நிற்க நாலு நாள் மூக்குப் புதைத்த வேற்றம் கொண்டு ஒருவன் இவ் வஸ்துவை ஸ்வ யத்னத்தாலே காண ஒருப்படுவதே – என்ன அறியானை தான் -என்கிறார் 4 | நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம் ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த ஆலமர் கண்டத் தரன் | அன்று,Andru - முன்பொரு காலத்தில், ஆலமரம் நீழல்,Aalamaram Neezhal - ஆலமரத்தின் நிழலிலே (இருந்துகொண்டு) நால்வர்க்கு,Naalvarkku - அகஸ்தியர்,புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு அறம் உரைத்த,Aram Uraitha - தருமோபதேசம் செய்தவனும் ஆலம் அமர் கண்டத்து,Aalam Amar Kandathu - விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக்கொண்டுள்ளவனுமான அரன்,Aran - சிவன் ஜந்து பொறி வாசல்,Jandhu Pori Vaasal - செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்கள் செல்லும்வழியில் போர் கதவம் சார்த்தி,Por Kadhavam Saartthi - வலிய கதவுகளையிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டிமேய வொண்ணாதபடி அவற்றை வென்று] நெறிவாசல் தானே ஆய் நின்றானை,Nerivaasal Thaaney Aay Nindraanai - உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை அறிவான் ஆம்,Arivaan Aam - அறிந்து விட்டதாகச் செருக்குற்றிருக்கிறானே! (இஃது என்ன அறிவு கேடு!.) |