| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2086 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆகக் கீழ் – எல்லாம் கூட அவனே சர்வேஸ்வரன் என்று சொல்லிற்றாய் நின்றது இனி – அல்லாதாருடைய அநீஸ்வரத்வம் சொல்ல வேண்டி வருமே அதுக்கு உறுப்பாக அல்லாதார் உடைய அநீஸ்வரத்வம் சொல்லுகிறார் மேல் அறிவானாம் -என்று நீர் ருத்ரனை ஷேபியா நின்றீர் நாட்டார் அவனையும் ஈஸ்வரனாக அன்றோ பிரதிபத்தி பண்ணிப் போருகிறது -என்ன இன்னான் ஈஸ்வரன் – இன்னான் ஈஸ்வரன் அல்லன் -என்னும் இடம் அவர்கள் உடைய ஸ்வ பாவங்கள் கொண்டே அறியலாம் – என்கிறார் – 5 | அரன் நாரணன் நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி, உரைநூல் மறையுறையும் கோயில், – வரைநீர் கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி, உருவமெரி கார்மேனி ஒன்று. | நாமம்,Naamam - ஒருவனுடைய பெயர் அரன்,Aran - எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாகவுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது; நாரணன்,Naarayanan - (மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்) (ஸர்வவ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது ஊர்தி,Ooruthi - ஒருவனுடைய வாஹனம் ஆன்விடை,Aanvidai - மூடத்தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்; புள்,Pul - (மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்) (வேதமூர்த்தியான) கருடப்பறவையாகும்; உரை,Urai - ஒருவனைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணம் நூல்,Nool - மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்; மறை,Marai - (மற்றொரு மூர்த்தியைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்) (ஸ்வயம்வ்யக்தமான) வேதமாகும்; உறையும் கோவில்,Urayum Kovil - ஒருவனுடைய வாஸஸ்தானம் வரை,Varai - (கடினத்தன்மையுள்ள) கைலாசமலையாம்; நீர்,Neer - (மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்) (அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்; கருமம்,Karumam - ஒருவனுடைய தொழில் அழிப்பு,Azhippu - (கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்; அளிப்பு,Azhippu - (மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்) (இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்; கையது,Kaiyadhu - ஒருவனுடைய கையிலுள்ள அயுதம். வேல்,Veel - (கொலைத்தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்; நேமி,Nemi - (மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்) அருளார் திருச்சக்கரம் உருவம்,Uruvam - வடிவம் எரி,Eri - (கண்கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்; கார்,Kaar - (மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்) (கண்டபோதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்; ஒன்று,Ondru - சிவனாகிய ஒருவன் மேனி,Meeni - (ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்; [ஸ்ரீமந்நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்] |