| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2088 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக நீர் அவனையே ஆஸ்ரயணீயன் என்னா நின்றீர் பார்த்த பார்த்த இடம் எங்கும் ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயணீயாருமாய் அன்றோ கிடக்கிறது -என்ன அவை எல்லாம் அவன் தானே காட்ட நான் கண்டாப் போலே காண்கை அன்றிக்கே தாம் தாமே காண நினைப்பார் – தன்னை வந்து கிட்டாமைக்கு அவன் பண்ணின மயக்கு -என்கிறார் தேபி மாமேவ கௌந்தேய யஜந்தி அவிதி பூர்வகம் -கீதை -9-23- யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்–கீதை -9-23- கௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர். அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர். சிரத்தையோடு கூடியிருத்தல் என்பது ஆஸ்திக்ய புத்தியுடைத்திருத்தல் அல்லது தெய்வம் துணைபுரியும் என்ற நம்பிக்கையுடனிருத்தலாம். அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது. மம மாயா துரத்த்யயா -கீதை -7-14- தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே–கீதை -7-14- ஹி ஏஷா குணமயீ மம தைவீ மாயா-ஏனெனில் இந்த குணமாகிய எனது தேவமாயை, துரத்யயா-கடத்தற்கரியது, யே மாம் ஏவ ப்ரபத்யந்தே-யாவர் என்னையே சரணடைவரோ, தே ஏதாம் மாயாம், தரந்தி-அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள். இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள். 7 | திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத் திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் படைத்த மயக்கு | திசையும்,Thisaiyum - திக்குக்களோடு கூடிய உலகங்களும் திசைஉறு தெய்வமும்,Thisaiyuru Theivamum - அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும் தெய்வத்து இசையும் கருமங்கள்,Theivathu Isaiyum Karumangal - அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும் எல்லாம்,Ellam - ஆகிய இவையெல்லாம், அசைவு இல்சீர்,Asaivu Ilseer - கேடில்லாத [நித்யமான] குணங்களையுடைய கண்ணன்,Kannan - ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த நெடு மால்,Nedu Maal - மிகப் பெருமையையுடையவனாய் கடல் கடைந்த,Kadal Kadaindha - (தன்பெருமையைப் பாராது சரணா கதர்களுக்காக உடம்புநோவக்) கடல் கடைந்தவனாய் கார் ஓதம் வண்ணன்,Kaar Oodham Vannan - மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவையுடையவனான எம்பெருமான் படைத்த,Padaitha - (தன்னிடம் வந்து பணியமாட்டா தவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கிவைத்த மயக்கு,Mayakku - அறிவை மயக்கும் பொருள்களாம். |