| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2089 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக இப்படி மதி மயங்கி எல்லாரும் தன்னை அறியாதே போம் இத்தனையோ -என்னில் அது செய்வது சாதாரண விஷயத்தில் ஆஸ்ரித விஷயத்தில் அசத்திய பிரதிஜ்ஞ்ஞனாய்க் கொண்டு அவர்கள் பக்கல் தன் பஷ பாதம் தோற்றக் கார்யம் செய்யும் என்கிறார் 8 | மயங்க வலம் புரி வாய் வைத்து வானத் தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள் தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே போராழிக் கையால் பொருது | திருமாலே நீ,Thirumaale Nee - லஷ்மீநாதனே!, நீ முயங்கு அமருள்,Muyangu Amarul - (எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க்க்களத்திலே மயங்க,Mayanga - எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக் வலம்புரி,Valampuri - ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை வாய் வைத்து,Vaai Vaiththu - தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி போர் ஆழிகையால்,Por Azhikayal - போர்செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே பொருது,Poruthu - (பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து வானத்து இயங்கும் எறி கதிரோனை,Vaanaththu Iyanguum Eri Kathironae - ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டேயிருக்கிற ஸூர்யனை தேர் ஆழியால்,Thaer Aazhiyaal - சக்கராயுதத்தினால் மறைத்தது என்,Maraiththathu En - மறைத்தது எதுக்காக? |