Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2089 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2089முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக இப்படி மதி மயங்கி எல்லாரும் தன்னை அறியாதே போம் இத்தனையோ -என்னில் அது செய்வது சாதாரண விஷயத்தில் ஆஸ்ரித விஷயத்தில் அசத்திய பிரதிஜ்ஞ்ஞனாய்க் கொண்டு அவர்கள் பக்கல் தன் பஷ பாதம் தோற்றக் கார்யம் செய்யும் என்கிறார் 8
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது
திருமாலே நீ,Thirumaale Nee - லஷ்மீநாதனே!, நீ
முயங்கு அமருள்,Muyangu Amarul - (எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க்க்களத்திலே
மயங்க,Mayanga - எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக்
வலம்புரி,Valampuri - ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை
வாய் வைத்து,Vaai Vaiththu - தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி
போர் ஆழிகையால்,Por Azhikayal - போர்செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே
பொருது,Poruthu - (பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து
வானத்து இயங்கும் எறி கதிரோனை,Vaanaththu Iyanguum Eri Kathironae - ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டேயிருக்கிற ஸூர்யனை
தேர் ஆழியால்,Thaer Aazhiyaal - சக்கராயுதத்தினால்
மறைத்தது என்,Maraiththathu En - மறைத்தது எதுக்காக?