Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2090 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2090முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ்வளவே அன்று கிடீர் – ஆபத்து வந்தால் ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அறத் தன்னை அழிய மாறியும் காரியம் செய்யும் ஸ்வபாவங்கள் கிடீர் என்கிறார் 9
பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண்
விரி தோட்ட,Viri Thoatta - ஒளி விரிகின்ற திருக்குண்டலங்களை அணிந்துள்ளவனே!
சே அடியை நீட்டி,Sae Adiyai Neetti - செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து
திசை நடுங்க,Thisai Natunga - பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
விண் துளங்க,Vin Thulangka - மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
மா வடிவில்,Maa Vadivil - (திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு
நீ அளந்த,Nee Alandha - நீ அளந்து திருவடி கீழ் இட்டுக்கொண்ட
மண்,Man - பூமியானது,
பொருகோடு ஓர் ஏனம் ஆய்,Porukodu Oor Aenam Aay - நிலத்தைக்குத்தியெடுத்துக்கொண்டுதிரிகிற கோரப்பற்களையுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய்
புக்கு,Pukku - (பிரளயஜலத்திலே முழுகி)
இடந்தாய்க்கு அன்று,Idandhaaykku Andru - அண்டபித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தியெடுத்துக் கொண்டுவந்த அக்காலத்தில்
உன்,Un - உன்னுடைய
ஒரு கோட்டின்மேல்,Oru Kottinmael - ஒரு கோரப்பல்லின் ஏகதேசத்திலே
கிடந்தது அன்றே,Kidandhathu Andrae - அடங்கிக்கிடந்த தல்லவோ?