திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2091 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பெரிய வடிவைக் கொண்டு சிறிய செயலைச் செய்த படி சொல்லிற்று கீழ் இங்குச் சிறிய வடிவைக் கொண்டு பெரிய செயலைச் செய்தபடி சொல்லுகிறது 10 | மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய் | பதவுரை Show / Hideமண்ணும்,Mannum - பூமியும் மலையும்,Malaiyum - குலபர்வதங்களும் மறிகடலும்,Marikadalum - அலையெறிகிற ஸமுத்ரங்களும் மாருதமும்,Maaruthamum - காற்றும் விண்ணும்,Vinnum - ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம் விழுங்கியது,Vilunkiyatu - (உனது திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுது செய்ததை மெய் என்பர்,Mei Enbar - ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்); எண்ணில்,Ennil - இதனை ஆராயுமளவில் அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு உன் வாய்,Alaku Alavu Kanta Sir Aliyaykku Un Vay - அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம் எல்லை கண்டிருக்கிற [-எண்ணிறந்த] கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது அன்று,Andru - இவற்றை யெல்லாம் விழுங்கின வக்காலத்தில் இஉலகு அளவும் உண்டோ,Iulaku Alavum Undoo - இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்குமோ? |