Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2091 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2091முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பெரிய வடிவைக் கொண்டு சிறிய செயலைச் செய்த படி சொல்லிற்று கீழ் இங்குச் சிறிய வடிவைக் கொண்டு பெரிய செயலைச் செய்தபடி சொல்லுகிறது 10
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்
மண்ணும்,Mannum - பூமியும்
மலையும்,Malaiyum - குலபர்வதங்களும்
மறிகடலும்,Marikadalum - அலையெறிகிற ஸமுத்ரங்களும்
மாருதமும்,Maaruthamum - காற்றும்
விண்ணும்,Vinnum - ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம்
விழுங்கியது,Vilunkiyatu - (உனது திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுது செய்ததை
மெய் என்பர்,Mei Enbar - ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்);
எண்ணில்,Ennil - இதனை ஆராயுமளவில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு உன் வாய்,Alaku Alavu Kanta Sir Aliyaykku Un Vay - அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம் எல்லை கண்டிருக்கிற [-எண்ணிறந்த] கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது
அன்று,Andru - இவற்றை யெல்லாம் விழுங்கின வக்காலத்தில்
இஉலகு அளவும் உண்டோ,Iulaku Alavum Undoo - இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்குமோ?