Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2115 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2115முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ் விஷயத்தில் தலையான பக்தி உடையளாய்க் கொண்டு பெற்றாள் யசோதைப் பிராட்டி ஒருத்தியும் இறே என்கிறார் புந்தியால் சிந்தியாது பெற்றாள் அவள் போலே காணும் – என் இதுவும் ஒரு எத்திறம் போலே இருக்கிறது அன்றிக்கே இத்தை ஒருவர் மெய் என்னும்படி எங்கனே – என்னவுமாம் 34
என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே
முன், Mun - முற்காலத்தில்
ஏழ் உலகு உண்டு, ஏழ் உலகு உண்டு - ஏழுலகங்களையும் (பிரளயத்திலழியாதபடி) அமுது செய்து
ஆல் இலையில், ஆல் இலையில் - ஓர் ஆலந்தளிரிலே
ஒருவன் ஆய, ஒருவன் ஆய - துணையற்றவனாய்க் கண் வளர்ந்தருளின
முகில்வண்ணா, முகில்வண்ணா - காளமேகத் திருவுருவனான பெருமானே!
நின் உருகி, நின் உருகி - உன்விஷயத்தில் உருக்கம் கொண்டவள்போல மேலுக்குக்காட்டி
முலை தந்தாள், முலை தந்தாள் - முலை கொடுத்தவளான
பேய் தாய், பேய் தாய் - பேய்த் தாயாகிய பூதனை யானவள்.
பேர்ந்திலள், பேர்ந்திலள் - அவ்விடத்தில் றின்றும் பேரமாட்டாமல் (பிணமாய்) விழுந்தாள்;
பேர் அமர் கண், பேர் அமர் கண் - பெரிய அந்தயுத்த பூமியில்
ஆய் தாய், ஆய் தாய் - இடைத்தாயாகிய யசோதையானவள்
முலை தந்த ஆறு, முலை தந்த ஆறு - முலை கொடுத்தவிதத்தை
ஒருவர், ஒருவர் - ஞானத்தில் ஒப்பற்றவர்களான வ்யாஸபராகராதி ரிஷிகள்
மெய் என்பர், மெய் என்பர் - மெய்யென்றுசொல்லாநிற்பர்கள்;
என், என் - இது என்ன ஆச்சரியம்?