Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2136 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2136முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் இப்படிக் கண்ணிலே வெண்ணெய் இட்டுக் கொண்டு விரோதிகளைப் போக்கித் தன்னுடையாரை நோக்கா நிற்க ஆர் தான் இவர்களைக் கண்  கொண்டு சிவக்கப் பார்ப்பார் என்கிறார் – யம படர் ஆராய்கை யாவது என்-என்றபடி – 55
அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்
அவன்தமரே யென்றொழிவ தல்லால், – நமன்தமரால்
ஆராயப் பட் டறியார் கண்டீர், அரவணைமேல்
பேராயற் காட்பட்டார் பேர்.
அரவு அணைமேல், Aravu Anaimel - (என்ன ஆச்சரியம்!..) சேஷசயனத்தின் மீது வாழ்கிற
பேர் ஆயற்கு, Per Aayarku - இடைத்தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
ஆட்பட்டார் பேர், Aadpattaar Per - அடிமைப்பட்டவர்களின் திருநாமத்தை வஹிக்குமவர்களும்
நமன் தமரால், Naman Thamaral - யமபடர்களாலே
“அவன் தமர் எவ்வினையர் ஆகிலும், Avan Thamar Evvinaiyar Aakilum - “ அந்த சர்வேச்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான செயலையுடையவராயிருந்தாலும்
எங்கோனவன் தமரே”-, Engonavan Thamare - எம்பெருமானுடைய பக்தர்களன்றோ”
என்று, Endru - என்று கொண்டாடிக் சொல்லி
ஒழிவது அல்லால், Ozhivathu Allal - (தாங்கள்) விலகிப்போவது தவிர,
ஆராயப்பட்டு அறியார், Aaraayappattu Ariyaar - ஆராயப்பட்டிருநக்க அறிய மாட்டார்கள்