| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2136 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் இப்படிக் கண்ணிலே வெண்ணெய் இட்டுக் கொண்டு விரோதிகளைப் போக்கித் தன்னுடையாரை நோக்கா நிற்க ஆர் தான் இவர்களைக் கண் கொண்டு சிவக்கப் பார்ப்பார் என்கிறார் – யம படர் ஆராய்கை யாவது என்-என்றபடி – 55 | அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன் அவன்தமரே யென்றொழிவ தல்லால், – நமன்தமரால் ஆராயப் பட் டறியார் கண்டீர், அரவணைமேல் பேராயற் காட்பட்டார் பேர். | அரவு அணைமேல், Aravu Anaimel - (என்ன ஆச்சரியம்!..) சேஷசயனத்தின் மீது வாழ்கிற பேர் ஆயற்கு, Per Aayarku - இடைத்தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஆட்பட்டார் பேர், Aadpattaar Per - அடிமைப்பட்டவர்களின் திருநாமத்தை வஹிக்குமவர்களும் நமன் தமரால், Naman Thamaral - யமபடர்களாலே “அவன் தமர் எவ்வினையர் ஆகிலும், Avan Thamar Evvinaiyar Aakilum - “ அந்த சர்வேச்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான செயலையுடையவராயிருந்தாலும் எங்கோனவன் தமரே”-, Engonavan Thamare - எம்பெருமானுடைய பக்தர்களன்றோ” என்று, Endru - என்று கொண்டாடிக் சொல்லி ஒழிவது அல்லால், Ozhivathu Allal - (தாங்கள்) விலகிப்போவது தவிர, ஆராயப்பட்டு அறியார், Aaraayappattu Ariyaar - ஆராயப்பட்டிருநக்க அறிய மாட்டார்கள் |