திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2139 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2139முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆன பின்பு -அவ்விஷயத்தை விட்டு நெஞ்சே நமக்கு ஒருக்காலும் ஆறி இருக்க விரகில்லை கிடாய் என்கிறார் – 58
தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி, எழுதும் எழுவாழி நெஞ்சே, – பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான், அந்தரமொன் றில்லை அடை.
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
மலர் கொண்டு, Malar Kondo - புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்
தூபம், Thoopam - தூபத்தை
கை ஏந்தி, Kai Aendhi - கையிலே ஏந்திக் கொண்டும்.
தொழுது, Thozhudhu - (எம்பெருமானை ) வணங்கி
எழுதும், Ezuthum - உஜ்ஜீவிப்போம்;
எழு, Ezu - நீ புறப்படு;
வாழி, Vaazhi - (உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:
மந்திரங்கள், Mandhirangal - [நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்] பகவந் மந்த்ரங்களை
பழுது இன்றி கற்பனவும், Pazhuthu Inri Karpanavum - முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்
மால் அடி கை தொழுவான் ஏ, Maal Adi Kai Thozhuvan Ae - ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:
அந்தரம் ஒன்று இல்லை, Andharam Ondru Illai - [ஆனபின்பு] (நாம் ஆறியிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை;
அடை, Adai - (அப்பெருமானை) விரைவில் சென்றுகிட்டு.