Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2139 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2139முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆன பின்பு -அவ்விஷயத்தை விட்டு நெஞ்சே நமக்கு ஒருக்காலும் ஆறி இருக்க விரகில்லை கிடாய் என்கிறார் – 58
தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,
எழுதும் எழுவாழி நெஞ்சே, – பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,
அந்தரமொன் றில்லை அடை.
நெஞ்சே, Nenje - மனமே!
மலர் கொண்டு, Malar Kondo - புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்
தூபம், Thoopam - தூபத்தை
கை ஏந்தி, Kai Aendhi - கையிலே ஏந்திக் கொண்டும்.
தொழுது, Thozhudhu - (எம்பெருமானை ) வணங்கி
எழுதும், Ezuthum - உஜ்ஜீவிப்போம்;
எழு, Ezu - நீ புறப்படு;
வாழி, Vaazhi - (உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:
மந்திரங்கள், Mandhirangal - [நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்] பகவந் மந்த்ரங்களை
பழுது இன்றி கற்பனவும், Pazhuthu Inri Karpanavum - முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்
மால் அடி கை தொழுவான் ஏ, Maal Adi Kai Thozhuvan Ae - ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:
அந்தரம் ஒன்று இல்லை, Andharam Ondru Illai - [ஆனபின்பு] (நாம் ஆறியிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை;
அடை, Adai - (அப்பெருமானை) விரைவில் சென்றுகிட்டு.