| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2139 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆன பின்பு -அவ்விஷயத்தை விட்டு நெஞ்சே நமக்கு ஒருக்காலும் ஆறி இருக்க விரகில்லை கிடாய் என்கிறார் – 58 | தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி, எழுதும் எழுவாழி நெஞ்சே, – பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான், அந்தரமொன் றில்லை அடை. | நெஞ்சே, Nenje - மனமே! மலர் கொண்டு, Malar Kondo - புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும் தூபம், Thoopam - தூபத்தை கை ஏந்தி, Kai Aendhi - கையிலே ஏந்திக் கொண்டும். தொழுது, Thozhudhu - (எம்பெருமானை ) வணங்கி எழுதும், Ezuthum - உஜ்ஜீவிப்போம்; எழு, Ezu - நீ புறப்படு; வாழி, Vaazhi - (உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக: மந்திரங்கள், Mandhirangal - [நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்] பகவந் மந்த்ரங்களை பழுது இன்றி கற்பனவும், Pazhuthu Inri Karpanavum - முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும் மால் அடி கை தொழுவான் ஏ, Maal Adi Kai Thozhuvan Ae - ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்: அந்தரம் ஒன்று இல்லை, Andharam Ondru Illai - [ஆனபின்பு] (நாம் ஆறியிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை; அடை, Adai - (அப்பெருமானை) விரைவில் சென்றுகிட்டு. |