| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2149 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறிவுக்கு பர்யவசாந பூமி அவன் அல்லது இல்லை – இங்கனே இருக்கச் செய்தே அவன் தன்னை அறிவார் தான் இல்லை என்கிறார் – 68 | உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி, உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார் விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப் பண்ணகத்தாய் நீகிடந்த பால்? | விண்ணகத்தாய், Vinnagaththai - பரமபதத்திலெழுந்தருளியிருப்பவனே! மண்ணகத்தாய், Mannagaththai - இந்த மண்ணுலகில் திருவ்வதரிப்பவனே! வேங்கடத்தாய், Vengadaththai - திருமலையில் நின்றருள் பவனே! பண் நால் வேதம் அகத்தாய், Pan Naal Vedham Agaththai - ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப்படுபவனே! உன் பெருமை, Un Perumai - (இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை ஊழி தோறு ஊழி, Oozhi Thoru Oozhi - காலமுள்ளதனையும் உணர்வார் ஆர், Unarvaar Aar - (இருந்து ஆராய்ந்தாலும்) அறியக்கூடியவர் யாவர்? உன் உருவம் தன்னை, Un Uruvam Thannai - உனது திவ்யாத்மஸ்வரூபத்தைத்தான் உணர்வார் ஆர், Unarvaar Aar - அறியக்கூடியவர் யாவர்? நீ கிடந்த பால், Nee Kidandha Paal - (ஆர்த்தரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான் உணர்வார் ஆர், Unarvaar Aar - அறிய வல்லாரார்? [எவருமில்லை.] |