திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2153 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2153முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவருடைய கரணங்கள் ஆனவை இவருக்கு முன்னே அங்கே  ப்ரவணமாய்- ஆழ்வீர்-இவ்விஷயத்தை விடாதே கிடீர் -என்று உபதேசிக்கப் புக்கன குரு சிஷ்ய க்ரமம் மாறி நின்றபடி – 72
அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன் பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், – முன்பூழி காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும் பூணாரம் பூண்டான் புகழ்.
பதவுரை Show / Hide
அன்பு, Anbu - பகவத்பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது
ஆழியானை, Azhiyinai - ஸர்வேச்வரனை
அணுகு என்னும், Anugu Ennum - கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது
நா, Naa - வாக்கானது
அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும், Avan Than Panbu Aazhi Thol Paravi Aethu Ennum - அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத்தோள்களைப் பேசித்துதி என்று உபதேசிக்கின்றது;
கண், Kan - கண்களானவை;
முன்பு ஊழிகாணானை காண் என்னும், Munbu Ozhikaananai Kaan Ennum - நாம் தன்னை வந்து ஆச்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானைஸேவி என்று உபதேசிக்கின்றன;
செவி, Sevi - காதுகள்
பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும், Poon Aaram Poondaan Pugazh Keel Ennum - ‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற அப்பெருமானுயைய திருக்குணங்களைக்கேள்’ என்று தூண்டுகின்றன.