| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2153 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவருடைய கரணங்கள் ஆனவை இவருக்கு முன்னே அங்கே ப்ரவணமாய்- ஆழ்வீர்-இவ்விஷயத்தை விடாதே கிடீர் -என்று உபதேசிக்கப் புக்கன குரு சிஷ்ய க்ரமம் மாறி நின்றபடி – 72 | அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன் பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், – முன்பூழி காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும் பூணாரம் பூண்டான் புகழ். | அன்பு, Anbu - பகவத்பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது ஆழியானை, Azhiyinai - ஸர்வேச்வரனை அணுகு என்னும், Anugu Ennum - கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது நா, Naa - வாக்கானது அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும், Avan Than Panbu Aazhi Thol Paravi Aethu Ennum - அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத்தோள்களைப் பேசித்துதி என்று உபதேசிக்கின்றது; கண், Kan - கண்களானவை; முன்பு ஊழிகாணானை காண் என்னும், Munbu Ozhikaananai Kaan Ennum - நாம் தன்னை வந்து ஆச்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானைஸேவி என்று உபதேசிக்கின்றன; செவி, Sevi - காதுகள் பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும், Poon Aaram Poondaan Pugazh Keel Ennum - ‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற அப்பெருமானுயைய திருக்குணங்களைக்கேள்’ என்று தூண்டுகின்றன. |