| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2175 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஒரு வயிறு எரித்தலை அனுசந்தியா அவ் வழியே துர்யோதன கோஷ்டியாலே பிறந்த அபாயத்தை அனுசந்திக்கிறார் – அதாவது பாரத சமரத்திலே பீஷ்மாதிகளுக்கு வைஸ்ரூபயம் காட்டின படி யாதல் அன்றிக்கே பிரளய காலத்தில் ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு திரு வயிற்றிலே புக்கவற்றைக் காட்டின படியாததால் செற்று எழுந்து தீ விழித்து-என்கிற வித்தனையும் கீழில் பாட்டுக்கு சேஷமாக்கி நிர்வஹித்தல் அன்றிக்கே இப்பாட்டு தனக்கு உடலாக்குதல் – 94 | செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும், மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும் மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால், இறையேனும் ஏத்தாதென் நா. | எழுந்து, Ezhundhu - (அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெருமுயற்சியோடு) கிளம்பி தீ விழித்து, Thee Vizhiththu - (உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து இந்த ஏழ் உலகும், Indha Aezh Ulakum - இவ்வுலகங்களை யெல்லாம் செற்று, Settru - அழித்து மற்று, Mattru - பின்பு இவை, Ivai - “பிரளயத்தில் அழித்த இப்பதார்த்தங்கள் சென்ற, Sendra - (என்னிடத்து) அடங்கிக்கிடக்கின்றன “ (என்று சொல்லி) ஆ என்று வாய் அங்காந்து, Aa Endru Vaai Angaanthu - ஆ வென்று வாயைத்திறந்து முற்றும், Mutrum - ஸகல ஜகத்தையும் மறையவற்கு, Maraiyavarku - வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு காட்டிய, Kaattiya - (முன்போலவே யிருப்பதைக்) காட்டியருளிய மாயவனை அல்லால், Maayavanai Allaal - ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து என் நா, En Naa - (வேறொருவனை) எனது நாவானது இறையேனும், Irayeenum - சிறிது ஏத்தாது, Aethaadhu - துதிக்கமாட்டாது |