Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2175 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2175முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஒரு வயிறு எரித்தலை அனுசந்தியா அவ் வழியே துர்யோதன கோஷ்டியாலே பிறந்த அபாயத்தை அனுசந்திக்கிறார் – அதாவது பாரத சமரத்திலே பீஷ்மாதிகளுக்கு வைஸ்ரூபயம் காட்டின படி யாதல் அன்றிக்கே பிரளய காலத்தில் ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு திரு வயிற்றிலே புக்கவற்றைக் காட்டின படியாததால் செற்று எழுந்து தீ விழித்து-என்கிற வித்தனையும் கீழில் பாட்டுக்கு சேஷமாக்கி நிர்வஹித்தல் அன்றிக்கே இப்பாட்டு தனக்கு உடலாக்குதல்    – 94
செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,
மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,
இறையேனும் ஏத்தாதென் நா.
எழுந்து, Ezhundhu - (அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெருமுயற்சியோடு) கிளம்பி
தீ விழித்து, Thee Vizhiththu - (உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும், Indha Aezh Ulakum - இவ்வுலகங்களை யெல்லாம்
செற்று, Settru - அழித்து
மற்று, Mattru - பின்பு
இவை, Ivai - “பிரளயத்தில் அழித்த இப்பதார்த்தங்கள்
சென்ற, Sendra - (என்னிடத்து) அடங்கிக்கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து, Aa Endru Vaai Angaanthu - ஆ வென்று வாயைத்திறந்து
முற்றும், Mutrum - ஸகல ஜகத்தையும்
மறையவற்கு, Maraiyavarku - வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு
காட்டிய, Kaattiya - (முன்போலவே யிருப்பதைக்) காட்டியருளிய
மாயவனை அல்லால், Maayavanai Allaal - ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
என் நா, En Naa - (வேறொருவனை) எனது நாவானது
இறையேனும், Irayeenum - சிறிது
ஏத்தாது, Aethaadhu - துதிக்கமாட்டாது